ஆப்நகரம்

பத்மாவதி சர்ச்சை: தீபிகா மூக்கை அறுப்பதாக மிரட்டல்

பத்மாவதி படத்தை ரிலீஸ் செய்தால் அப்படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று கார்னி சேனா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.

TNN 16 Nov 2017, 11:27 pm
பத்மாவதி படத்தை ரிலீஸ் செய்தால் அப்படத்தின் ஹீரோயின் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுப்போம் என்று கார்னி சேனா அமைப்பு மிரட்டல் விடுத்துள்ளது.
Samayam Tamil padmavati row karni sena threatens to cut off deepika padukones nose
பத்மாவதி சர்ச்சை: தீபிகா மூக்கை அறுப்பதாக மிரட்டல்


சஞ்சய் லீலா பன்சாலி இயக்கியுள்ள பத்மாவதி என்ற பாலிவுட் வரலாற்றுத் திரைப்படத்தில் பத்மாவதியாக தீபிகா படுகோனே நடித்துள்ளார். ஷாகித் கபூர் ராணா ரத்தன் சிங் வேடத்திலும் ரன்வீர் சிங் அலாவுதின் கில்ஜி வேடத்திலும் நடித்துள்ளனர். இந்தப் படத்தை ரிலீஸ் செய்ய ராஜஸ்தான் மாநிலத்தில் ராஜ்புட் சமூகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவிக்கின்றனர்.

இது தொடர்பான வழக்கு உச்சநீதிமன்றம் வரை சென்று படத்திற்கு தடைவிதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது. இதனையடுத்து, டிசம்பர் 1ஆம் தேதி பத்மாவதி வெளியாக உள்ளது.

இந்நிலையில் இப்படத்தை எதிர்க்கும் பிராமண அமைப்பான கார்னி சேனா அமைப்பு பத்மாவதியாக நடித்துள்ள தீபிகா படுகோனேவுக்கு பகிரங்க மிரட்டல் விடுத்துள்ளது. 'பொதுவாக நாங்கள் பெண்களை அடிக்கமாட்டோம். ஆனால், தேவைப்பட்டால் தீபிகா படுகோனேவின் மூக்கை அறுக்கவும் தயங்கமாட்டோம்' என்று அந்த அமைப்பின் தலைவர் தெரிவித்துள்ளார்.

மேலும், மற்றொரு பிராமண அமைப்பு படத்திற்கு தடை விதிக்க வலியுறுத்தி ரத்தக்கறை பட்ட கடிதத்தை திரைப்பட தணிக்கைக் குழுவிடம் சமர்ப்பித்துள்ளது.

ராஜஸ்தானில் 13ஆம் நூற்றாண்டில் ஆட்சி செய்த ராஜபுத்திர வம்சத்தைச் சேர்ந்த சித்தூர் ராணி பத்மினியின் வரலாற்றை அடிப்படையாகக் கொண்டது பத்மாவதி படத்தின் கதை. டெல்லி சுல்தான் அலாவுதீன் கில்ஜி, ராணி பத்மினி மீது ஆசைகொண்டு படை எடுத்து வந்ததாகக் கூறப்படுகிறது. இதனை இப்படத்தில் தவறாக சித்தரித்துள்ளதாக இப்படத்தின் எதிர்ப்பாளர்கள் பலர் குற்றம் சாட்டுகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்