ஆப்நகரம்

பிரியங்கா சோப்ராவை ஐநா நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்க வேண்டும்: பாகிஸ்தான் புகார்!

ஐநாவிலன் அமைதிக்கான நல்லெண்ண தூதராக இருக்கும் பிரியங்கா சோப்ரா பாகிஸ்தான் நாட்டிற்கு எதிராக செயல்பட்டு வருவதாக பாகிஸ்தான் அரசு கடிதம் அனுப்பியுள்ளது.

Samayam Tamil 22 Aug 2019, 11:48 am
தமிழ் சினிமாவில் தளபதி விஜய் நடிப்பில் வந்த தமிழன் படத்தின் மூலம் அறிமுகமானவர் நடிகை பிரியங்கா சோப்ரா. தொடர்ந்து பாலிவுட் மற்றும் ஹாலிவுட்டில் முன்னணி நடிகைகளில் ஒருவராக வலம் வந்தார். கடந்த 2016ம் ஆண்டு ஐநாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதராக நியமிக்கப்பட்டார்.
Samayam Tamil Priyanka Chopra


இந்த நிலையில், அண்மையில், அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் நகரில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் காஷ்மீரில் 370ஆவது சிறப்பு அந்தஸ்து ரத்து செய்யப்பட்டதற்கு இந்தியாவிற்கு ஆதரவு தெரிவித்திருந்தார். இதே போன்று பாகிஸ்தானின் பயங்கரவாதிகள் முகாமை இந்திய போர் விமானங்கள் தாக்கி அழித்ததற்கு பாராட்டு தெரிவித்து டுவிட்டரில் கருத்து பதிவிட்டிருந்தார்.

மேலும் படிக்க:அனைத்து உயிர்களிடத்தும் அன்பு காட்ட வேண்டும்: பக்ரீத் திரை விமர்சனம்!

இதையும் படிங்க:சினிமாவில் அறிமுகப்படுத்தியவரின் மரணத்திற்கு செல்லாத விக்ரம்!

Also Read This: Madras Day 2019: வந்தாரை வாழ வைக்கும் சென்னை:"மெட்ராஸ் டே" ஸ்பெஷல் சாங்ஸ்!

தற்போது இது சர்ச்சையை ஏற்படுத்தி வரும் நிலையில், பாகிஸ்தான் மனித உரிமைகள் அமைச்சர் சைரீன் மசாரி யுனிசெஃப் நிர்வாக இயக்குநருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளார். அதில், கூறியிருப்பதாவது: இந்திய அரசிற்கு தொடர்ந்து ஆதரவு தெரிவித்தும், இந்திய பாதுகாப்பு அமைச்சரால், பாகிஸ்தான் நாட்டிற்கு கொடுத்த அணு அச்சுறுத்தல்களுக்கு ஆதரவாகவும் பிரியங்கா சோப்ரா செயல்பட்டு வருகிறார்.

ஆதலால் அவரை ஐநா அமைதிக்கான நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து உடனடியாக நீக்க வேண்டும். இல்லையென்றால், அவரை நல்லெண்ண தூதராக நியமித்தது கேலிக்கூத்தாக நிலை ஏற்படும். அதன் காரணமாக பிரியங்கா சோப்ராவை ஐநா அமைதிக்கான நல்லெண்ண தூதர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என்று என்றார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த விவகாரத்தில் நடிகை பிரியங்கா சோப்ராவிற்கு ஆதரவாக கங்கனா ரணாவத் தற்போது குரல் கொடுத்துள்ளார். இது குறித்து அவர் கூறியிருப்பதாவது: ஐநாவின் அமைதிக்கான நல்லெண்ண தூதர் என்பது எளிதான தேர்வல்ல. நீங்கள், உங்களது கடமைக்கும், உணர்ச்சிகளுக்கும் இடையில் சிக்கிக் கொண்டிருக்கும் போது, நல்லெண்ண தூதராக இருப்பதால், உங்களது அடையாளத்தை தேசத்திற்காக மட்டுமே பயன்படுத்த முடியாது என்பது உறுதி.

ஆனால், நாமில் எத்தனை பேர் ஒவ்வொரு நாளும், மனதை விட இதயத்தை தேர்வு செய்கிறோம் என்று கேள்வி எழுப்பியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்