ஆப்நகரம்

கணவனால் சுட்டுக் கொல்லப்பட்ட பிரபல நடிகை!

நடிகையும், பாடகியுமான ரேஷ்மா, அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.

Samayam Tamil 10 Aug 2018, 6:08 pm
நடிகையும், பாடகியுமான ரேஷ்மா, அவரது கணவரால் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளார்.
Samayam Tamil bacd08136df984edb9721d6dd3176d91


பாகிஸ்தானின் உள்ள கைபர் பக்துங்குவா பகுதியைச் சேர்ந்தவர் நடிகை ரேஷ்மா. இவர் பல படங்களில் பாடல்களையும் பாடியுள்ளார். இவர் ஹகிமாபாத்தில் தன் அண்ணனுடன் வசித்து வந்தார். இந்நிலையில் «அவரது கணவர் வந்து ரேஷ்மாவுடன் பிரச்னை செய்துள்ளார். பேச்சுவார்த்தை முற்றி, கணவர்தான் வைத்திருந்த துப்பாக்கியால் ரேஷ்மாவை சுட்டுவிட்டு தப்பியோடிவிட்டார்.

இந்த சம்பவத்தில் ரேஷ்மா அதே இடத்தில் உயிரிழந்தார். ரேஷ்மா அந்த நபரின் 4வது மனைவி ஆவார். கணவருடன் பிரச்சனை ஏற்பட்டதையடுத்து அவர் தனது சகோதரர் வீட்டில் வசிந்து வந்தார். இந்த சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்