ஆப்நகரம்

மான் தோலில் செருப்பு: ஷாருக்கானிற்கு பரிசளிக்க முயன்ற பாகிஸ்தான் ரசிகர் கைது

மான் தோலில் செருப்பு தயாரித்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கானிற்கு பரிசளிக்க முயன்ற பாகிஸ்தான் ரசிகர் கைது செய்யப்பட்டார்.

TNN 27 Aug 2016, 2:45 pm
பெஷாவர்: மான் தோலில் செருப்பு தயாரித்து, பாலிவுட் நடிகர் ஷாருக்கானிற்கு அனுப்ப முயன்ற பாகிஸ்தான் நாட்டவர் கைது செய்யப்பட்டார்.
Samayam Tamil pakistani shoemaker jailed over deer skin sandals for shah rukh khan
மான் தோலில் செருப்பு: ஷாருக்கானிற்கு பரிசளிக்க முயன்ற பாகிஸ்தான் ரசிகர் கைது


பாலிவுட் நடிகர் ஷாருக்கானின் உறவினர், பாகிஸ்தான் நாட்டின் பெஷாவர் நகரில் வசித்து வருகிறார். இவர் நடிகர் ஷாருக்கானிற்கு காலணிகளை பரிசளிக்க விரும்பினார். இதனால் அங்குள்ள காலணி தயாரிப்பாளர் ஜஹாங்கீர் கானிடம் சென்றுள்ளார். நடிகர் ஷாருக்கானின் தீவிர ரசிகரான ஜஹாங்கீர், சிறப்பு காலணி ஒன்றை பரிசளிக்க விரும்பியுள்ளார்.

இதனால் மான் தோலில் காலணி ஒன்றை தயாரித்து, அதனை ஷாருக்கானின் உறவினரிடம் அளித்ததாக கூறப்படுகிறது. இந்த செய்தி அந்நகர் முழுவதும் பரவத் தொடங்கியது. இதையடுத்து வனவிலங்கு அமைப்பின் அதிகாரிகள் போலீசில் புகார் அளித்துள்ளனர். உடனே போலீசார் ஜஹாங்கீர் கானை கைது செய்து, விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

இதுகுறித்து வனவிலங்கு அதிகாரி ஒருவர் கூறுகையில், மான் தோல் பயன்படுத்தப்பட்டது உறுதி செய்யப்படவில்லை என்றும், தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருவதாகவும் கூறினார். குற்றம் உறுதி செய்யப்படும் பட்சத்தில், வனவிலங்கு சட்டத்தின் படி, தண்டனை வழங்கப்படும் என்றும் தெரிவித்தார். பாகிஸ்தானில் ஷாருக்கானிற்கு ஏராளமான ரசிகர்கள் இருப்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்