ஆப்நகரம்

விஜய்க்கு அழைப்பு விடுத்த கேரள ஆட்சியர்

அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் விஜய் மட்டும் போதும் என வாழும் கிராம மக்களை பார்த்த அனுபவத்தை துணை மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.

TNN 11 Aug 2016, 5:51 pm
பாலக்காடு: அடிப்படை வசதிகள் ஏதும் இல்லாமல் விஜய் மட்டும் போதும் என வாழும் கிராம மக்களை பார்த்த அனுபவத்தை துணை மாவட்ட ஆட்சியர் தனது முகநூல் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
Samayam Tamil palakad assistant collector invites actor vijay to create awarness for diehard vijay fans of a village
விஜய்க்கு அழைப்பு விடுத்த கேரள ஆட்சியர்


தமிழகத்தைச் சேர்ந்த உமேஷ் கேசவன் என்பவர் கேரள மாநிலம் பாலக்காடு மாநிலத்தில் துணை மாவட்ட ஆட்சியராக பணியாற்றி வருகிறார். இவர் சமீபத்தில் பாலக்காடு மாவட்டம் அருகேயுள்ள அட்டப்பாடி கிராமத்துக்கு சென்றுள்ளார். அடிப்படை வசதிகள் எதுவும் இல்லமல், படிப்பிலும், வேலைவாய்ப்பிலும் அந்த கிராமம் பின்தங்கியிருந்ததை அறிந்தார்.

இதில் அந்த கிராமத்தைச் சேர்ந்த பெரும்பாலான இளைஞர்கள் இளையதளபதி விஜய்யின் தீவிர ரசிகர்கள் என்பதையும் அறிந்துக் கொண்டார். இதையடுத்து, தனது ஃபேஸ்புக் பக்கத்தில் ஒரு பதிவை வெளியிட்டார். மேலும், விஜய்யின் அலுவலகத்துக்கு தொடர்புகொண்டு அவரது ரசிகர்களின் வாழ்வுக்காக விழிப்புணர்வு ஏற்படுத்துமாறும் வேண்டுகோள் வைத்துள்ளார்.

துணை ஆட்சியர் உமேஷ் கேசவனின் ஃபேஸ்புக் பகிர்வில், அந்த கிராமத்தின் பின்தங்கிய நிலை குறித்து நீண்ட விளக்கத்துடன், அரசின் சலுகைகள் அதுவும் கிராம மக்களை சென்றடையவில்லை. விஜய் மட்டுமே அவர்களிடத்தில் சென்றடைந்துள்ளார் என பகிர்ந்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்