‘பள்ளிப்பருவத்திலே’ படம் மாணவர்களை கவுரப்படுத்துவதற்காக எடுக்கப்பட்ட படம் என்கிறார் இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்.
பிரபல இசையமைப்பாளர் சிற்பியின் மகன் நந்தன் ராம் ஹீரோவாக நடிக்கும் படம் ‘பள்ளி பருவத்திலே’. இந்தப் படத்தில் வெண்பா என்பவர் ஹீரோயினியாக நடிக்கிறார். இவர் ‘கற்றது தமிழ்’ படத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்தவர். படத்தை அறிமுக இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர் இயக்கி வருகிறார். படத்தை வி.கே.பி.டி கிரியேசன்ஸ் சார்பில் டி.வேலு தயாரிக்கிறார். படத்திற்கு விஜய் நாராயணன் இசை அமைக்கிறார்.
இந்தப் படம் பற்றி இயக்குனர் வாசுதேவ் பாஸ்கர்கூறியதாவது:‘‘கலகலப்பான குடும்ப சூழலையும், பள்ளி மாணவர்களையும் மையப்படுத்தி அமைக்கப் பட்ட காமெடி கலந்த, காதல் கதை. இது பள்ளி மாணவர்கள் பற்றிய கதை தான். ஆனால் மாணவர்களை கவுரப்படுத்தும் கதை நான் யாரிடம் உதவியாளராக சேர வேண்டும் என்று நினைத்தேனோ அதே கே.எஸ்.ரவிகுமார் சாரை எனது இயக்கத்தில் இந்த படத்தில் நடிக்க வைத்தது எனக்கு கிடைத்த பாக்கியமாக கருதுகிறேன்
. அவரிடம் நான் கதை சொன்னதும், முழுக் கதையையும் கேட்டு விட்டு இது என்ன விருதுக்காக எடுக்கிற படமா என்று கேட்டார். இதே வார்த்தையை தான் கவிப்பேரரசு வைரமுத்துவும் என்னிடம் சொன்னார். இவர்கள் இருவரும் சொன்னதே எனக்கு தேசிய விருது கிடைத்த சந்தோஷம் என்கிறார் வாசுதேவ் பாஸ்கர்.
PALLIPARUVAM movie honour students