ஆப்நகரம்

வாய் பேச முடியாமல், காது கேட்காமல் உயிருக்கு போராடி வரும் பரவை முனியம்மா!

பரவை முனியம்மா உடல் நிலை மிகவும் மோசமாகவுள்ளதாக அவரது குடும்பத்தினர் தெரிவித்துள்ளனர்.

Samayam Tamil 25 Oct 2019, 12:12 pm
'சிங்கம் போலே நடந்து வரான் செல்ல பேராண்டி' என்ற ஒரு பாடல் மூலம் கோலிவுட் ரசிகர்களை திரும்பி பார்க்க வைத்தவர் பரவை முனியம்மா (85 வயது).
Samayam Tamil 31845874


சியான் விக்ரம் நடிப்பில் வந்த 'தூள் படத்தில் முக்கிய வேடத்தில் நடித்து ரசிகர்களின் மனதில் இடம் பிடித்தார். அந்த வெற்றியை தொடர்ந்து மொத்தம் இதுவரை 30க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். அது மட்டுமின்றி கிராமிய சமையல் நிகழ்ச்சியிலும் பணியாற்றியுள்ளார்.

இவருக்கு மூன்று மகன்கள் மற்றும் மூன்று மகள்கள் உள்ளனர். இந்த நிலையில், அண்மை காலமாக உடல்நிலை சரியில்லாத காரணத்தினால், படங்களில் நடிப்பதை தவிர்த்து வந்தார். அதோடு, தொடர்ந்து வறுமையின் பிடியிலும் சிக்கித் தவித்தார்.

அப்போது தான், அவருக்கு தமிழக அரசு சார்பில் நிதியுதவி கிடைத்தது. ரூ.6 லட்சம் வரையில் வங்கியில் செலுத்தப்பட்டு, அவருக்கு மாதந்தோறும் ரூ.6 ஆயிரம் வருமானம் கிடைக்கும்படி ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.

ஒரு வாட்ஸ் ஆப் செய்தியால் தற்கொலை செய்த விஜய் பட நடிகையின் கணவர்

இந்த நிலையில், தற்போது அவரது உடல்நிலை மிகவும் மோசமடைந்ததைத் தொடர்ந்து தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டார். அவரி பரிசோதித்த மருத்துவர்கள், அவருக்கு சிறுநீரகங்கள் செயலிழந்து விட்டதாகவும், இதயம், நுரையீரலிலும் நீர்கட்டி இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.

ஆனால், தொடர்ந்து சிகிச்சைக்கு போதிய பண வசதி இல்லாததால், பரவை முனியம்மாவை அவரது குடும்பத்தினர் வீட்டிற்கு அழைத்துச் சென்று வீட்டிலேயே வைத்து சிகிச்சை அளித்து வருகின்றனர்.

முனியம்மா தற்போது நோயால் படுத்த படுக்கையாக, காது கேட்காமலும், வாய் பேச முடியாமலும் அவதிப்பட்டு வருகிறார். அதனால் அவருக்கு அரசு மற்றும் சினிமா துறையைச் சார்ந்தவர்கள் உதவ வேண்டும் என்று அவரது குடும்பத்தினர் கோரிக்கை வைத்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்