ஆப்நகரம்

’பரியேறும் பெருமாள்’ அருமையான படம்; சர்வதேச திரைப்பட விழாவில் பாராட்டு!

கோவா: பரியேறும் பெருமாள் திரைப்படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.

Samayam Tamil 22 Nov 2018, 6:40 pm
பா.ரஞ்சித் தயாரிப்பில் மாரி செல்வராஜ் இயக்கத்தில் வெளியான திரைப்படம் பரியேறும் பெருமாள். இதில் கதிர், ஆனந்தி, யோகி பாபு உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படம் விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகவும் நல்ல வரவேற்பை பெற்றது.
Samayam Tamil PP


அறிமுக இயக்குநர் மாரி செல்வராஜூற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்தனர். இந்நிலையில் கோவாவில் நடைபெற்று வரும் 49வது சர்வதேச திரைப்பட விழாவில், இந்தியன் பனோரமா பிரிவில் ‘பரியேறும் பெருமாள்’ படம் திரையிடப்பட்டது.

இது சமூகத்தின் முக்கியப் பிரச்சனையை பேசியுள்ளதாக பாராட்டப்பட்டது. உணர்வுப்பூர்வமான பிரச்சனையை எடுத்துரைத்துள்ளதாக விமர்சிக்கப்பட்டது. பல்வேறு மாநில பார்வையாளர்கள், சர்வதேச பார்வையாளர்களை கவர்ந்துள்ளது.

இது அப்படக்குழுவினரை மகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. இதுகுறித்து நீலம் புரொடக்‌ஷன்ஸ் நிறுவனம் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளது.

அதில், சர்வதேச திரைப்பட விழாவில் தங்கள் படத்திற்கு பெரும் ஆதரவு கிடைத்துள்ளது. இதனை பகிர்ந்து கொள்வதில் பெரும் மகிழ்ச்சி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்