ஆப்நகரம்

பிரான்ஸ் படவிழாவில் கலந்து கொள்ளும் ‘பரியேறும் பெருமாள்‘

‘பரியேறும் பெருமாள்’ வெளியாகி பல மாதங்கள் ஆன பின்னரும், தற்போது இந்தப் படம் பிரான்ஸ் பட விழாவில் மீண்டும் திரையிடப்படவுள்ளது.

Samayam Tamil 11 Apr 2019, 3:44 pm
இயக்குனர் பா.இரஞ்சித் தயாரிப்பில் மாரிசெல்வராஜ் இயக்கத்தில் கதிர், ‘கயல்’ ஆனந்தி ஆகியோர் நடிப்பில் வெளியான படம் ‘பரியேறும் பெருமாள்’. இந்தப் படம் வெளியாகி பல மாதங்கள் ஆகிவிட்டன.
Samayam Tamil pariyerum-peruma;


இந்தப் படம் வெளியாகி வெற்றி பெற்ற பின்னரும் பல வெளிநாடுகளில் பல திரைப்பட விழாக்களில் திரையிடப்பட்டு வருகிறது. பல விருதுகளையும், பாராட்டுக்களையும் பெற்றுவரும் நிலையில், தற்போது பிரான்ஸ் நாட்டில் நடைபெறும் திரைப்பட திருவிழாவில் திரையிடப்படுகிறது.

புதிய படங்கள் திரையரங்கத்தில் வெளியாவதற்கு முன்பே இந்த விழாவில் படங்கள் திரையிடுவது வழக்கம். ஆனால் ‘பரியேறும் பெருமாள்’ படம் வெளியாகி பல மாதங்களுக்குப் பின்னரும் இவ்விழாவில் திரையிடப்படுவது மகிழ்ச்சியை தருகிறது என்கிறார் இயக்குனர் மாரிசெல்வராஜ்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்