ஆப்நகரம்

புதுப்பேட்டை 2 இருக்கட்டும்... ஆயிரத்தில் ஒருவன் 2 பத்தி பார்த்திபன் வெளியிட்ட தகவல் இதோ !

ஆயிரத்தில் ஒருவன் 2 படத்தைப் பற்றி செல்வராகவனுடன் நடந்த உரையாடல் பற்றிய தகவலை வெளியிட்டுள்ளார் பார்த்திபன்.

Samayam Tamil 7 Mar 2020, 1:44 pm
செல்வராகவன், புதுப்பேட்டை 2 படத்தைப் பற்றிய அறிவிப்பு வெளியிட்டுள்ளதைத் தொடர்ந்து ஆயிரத்தில் ஒருவன் 2 எப்போது என்கிற கேள்வி எழுந்துள்ளது. இது குறித்து அவரிடமே பலர் கேட்டு வருகிறார்கள். இந்நிலையில், செல்வராகவன் பிறந்தநாளில் அவருக்கு வாழ்த்து தெரிவித்து, ஆயிரத்தில் ஒருவன் பற்றிய கேள்வியையும் கேட்டுள்ளார் பார்த்திபன். இதுகுறித்து செல்வராகவன் கூறிய பதிலையும் சேர்த்தே ட்விட்டரில் வெளியிட்டுள்ளார்.
Samayam Tamil parthiban


பார்த்திபன் ட்விட்டரில் வெளியிட்டுள்ள தகவல் இதோ



திரை சரித்திரத்தில் ‘ஆயிரத்தில் ஒருவன் 2’ போன்ற எதிர்பார்ப்பு வேறு படத்திற்கு இருந்துள்ளதா?எனத் தெரியவில்லை! எனவே நம்பிக்கையுடன் இதை பகிர்கிறேன்!

இவ்வாறு அவர் குறிப்பிட்டுள்ளார்.

இதற்கு பதிலளித்துள்ள செல்வராகவன், ஆயிரத்தில் ஒருவன் 2 விரைவில் வெளிவரும் என தெரிவித்துள்ளார்.

கார்த்தி, பார்த்திபன், ரீமாசென், ஆண்ட்ரியா உள்ளிட்டோர் நடிப்பில் செல்வராகவன் இயக்கிய படமான ஆயிரத்தில் ஒருவன் வெளியான சமயத்தில் பெரிய அளவில் வரவேற்பு பெறவில்லை. ஆனால் தற்போது இந்த படத்தை பார்த்துவிட்டு புகழாதவர்கள் இல்லை எனும் அளவுக்கு கொண்டாடுகின்றனர். ஒருவேளை சரியான நேரத்தில் வரவேற்பு கிடைத்திருந்தால், அதன் இரண்டாம் பாகத்தை எடுக்க முயற்சி எடுத்திருப்பார்கள். எதுவாக இருப்பினும், தற்போது புதுப்பேட்டை 2 வருகிறதல்லவா... ஆயிரத்தில் ஒருவனும் வரும் என நம்புவோம் என்கிறார்கள் செல்வா ரசிகர்கள்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்