ஆப்நகரம்

'ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும்': பார்த்திபன்

ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும் என்று பார்த்திபன் ட்விட்டரில் தெரிவித்துள்ளார்.

Samayam Tamil 30 Sep 2019, 1:16 pm
கோலிவுட்டில் எப்போதும் வித்தியாசமான படங்களை எடுப்பவர் இயக்குநர் பார்த்திபன். அவரின் அடுத்த முயற்சியாக உருவாகிய படம் தான் 'ஒத்த செருப்பு சைஸ் 7'. அந்த படத்தை தான் ஒருவர் மட்டுமே எழுதி, இயக்கி, தயாரித்து, நடித்துள்ளார்.
Samayam Tamil parthiban


படம் வெளியாகும் முன்பே பார்த்திபனின் இந்த புதிய முயற்சியைக் கண்டு திரையுலக பிரபலங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்தனர். ஒத்த செருப்பு படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்து வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது.

தண்ணீரில் குழந்தையை பெற்றேன்: போட்டோ வெளியிட்ட அஜித் பட நடிகை

ஒரு புதிய படம் வெளியானால், அது ரிலீஸான சில மணி நேரத்திற்குள் அதை ஆன்லைனில் கசியவிட்டுவிடுகிறது தமிழ் ராக்கர்ஸ். இதனால் பெரிய படம் முதல் சிறிய படம் வரை அனைத்தின் வசூலும் பாதிக்கப்படுகிறது. இந்நிலையில் ஒத்த செருப்பு சைஸ் 7 படமும் திருட்டுத்தனமாக ஆன்லைனில் வெளியாகியுள்ளது.


இதைக் கண்டு அதிர்ச்சியடைந்த பார்த்திபன் ட்வீட் செய்துள்ளார். அதில் அவர் கூறியிருப்பதாவது, 'இப்படிப் பட்ட படத்தையும் ஈவு இரக்கம் இல்லாமல் கழிவிரக்கம் செய்து போடுவதும், பார்ப்பதும் அருவருப்பான செயல்! ஒத்த செருப்பு பத்தாது ரெண்டு செருப்பாலயும் அடிக்கணும் என் 7-ம் அறிவை! இப்படி ஒரு படத்தை இனி எடுப்பியான்னு! தியேட்டரில் கிடைக்கும் வரவேற்புக்கு இன்னும் பல செய்ய தூண்டுகிறது' என்று தெரிவித்துள்ளார். இந்த ட்வீட்டை பார்த்த ரசிகர்கள் பார்த்திபனுக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்