ஆப்நகரம்

கொரோனா தொற்று: 2 கோடி ரூபாய் அளித்த பவன் கல்யாண்

கொரொனாவு வைரஸ் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில், அதற்காக அரசுக்கு 2 கோடி ருபாய் அளித்துள்ளார் நடிகர் பவன் கல்யாண்.

Samayam Tamil 26 Mar 2020, 10:12 am
பவர் ஸ்டார் பவன் கல்யாண் தற்போது பிங்க் படத்தின் தெலுங்கு ரீமேக்கில் நடிக்கிறார். வக்கீல் சாப் என பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் கடந்த மார்ச் 2ம் தேதி வெளிவந்து அதிக வரவேற்பை பெற்றது.
Samayam Tamil Pawan Kalyan


தமிழில் அஜித் நடிப்பில் நேர்கொண்ட பார்வை என்ற பெயரில் ரீமேக் செய்தபோது பிங்க் கதையில் சில மாற்றங்களை செய்தனர் அது போலவே தெலுங்கு ரசிகர்களுக்காக வக்கீல் சாப் படத்தில் சில மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. தற்போது கொரோனா காரணாமாக ஷூட்டிங் நிறுத்தப்பட்டுள்ளது.

சினிமா மட்டுமின்றி அரசியலில் ஈடுபட்டு வரும் பவண் கல்யாண், தற்போது கொரோனாவுக்கு எதிராக போராடி வரும் அரசுக்கு நிதி உதவி அளித்துள்ளார்.

பிரதமர் நிவாரண நிதிக்கு 1 கோடி ருபாய் வழங்கியுள்ள அவர் 'பிரதமர் மோடியின் தீவிர பணிகள் கொரோனாவில் இருந்து இந்த நாட்டை காப்பாற்றும்' என கூறியுள்ளார்.

மேலும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா ஆகிய மாநில முதலமைச்சர்களின் நிவாரண நிதிக்கு பவன் கல்யாண் தலா 50 லட்சம் ருபாய் அனுப்பியுள்ளார்.


அடுத்த செய்தி

டிரெண்டிங்