திரையரங்கை சூறையாடிய பவன் கல்யான் ரசிகர்கள்: அதிர்ச்சியில் தெலுங்கு சினிமா!
பவன் கல்யான் நடித்த 'வக்கீல் சாப்' திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கம் ஒன்றில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கை சூறையாடியுள்ளனர்.
Samayam Tamil 10 Apr 2021, 1:55 pm
ஹைலைட்ஸ்:
- 'பிங்க்' திரைப்படம் தெலுங்கில் 'வக்கீல் சாப்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது.
- மூன்று வருடங்களுக்கு பிறகு இந்த படத்தில் நடித்துள்ளார் பவன் கல்யாண்.
- 'வக்கீல் சாப்' திரைப்படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் ரசிகர்கள் ரகளை.
தமிழில் அஜித் நடிப்பில் வெளியாகி அமோக வரவேற்பினை பெற்ற 'நேர்கொண்ட பார்வை' திரைப்படம் தெலுங்கில் 'வக்கீல் சாப்' என்ற பெயரில் ரீமேக் ஆகிவுள்ளது. பவன் கல்யான் நடித்துள்ள இந்த திரைப்படம், தெலுங்கு ஆடியன்ஸ் மத்தியிலும் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது. இந்நிலையில் 'வக்கீல் சாப்' திரைப்படம் திரையிடப்பட்ட திரையரங்கம் ஒன்றில் , தொழில்நுட்ப கோளாறு காரணமாக படம் பாதியில் நிறுத்தப்பட்டால், ஆத்திரமடைந்த ரசிகர்கள் திரையரங்கை சூறையாடிய நிகழ்வு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்தியில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற 'பிங்க்' திரைப்படம் தமிழில் 'நேர்கொண்ட பார்வை' என்ற பெயரில் ரீமேக் ஆனதை போல, தெலுங்கில் 'வக்கீல் சாப்' என்ற பெயரில் ரீமேக் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீராம் வேணு இயக்கத்தில் பவன் கல்யாண் நடித்துள்ள இந்த திரைப்படத்தில் பிரகாஷ் ராஜ், நிவேதா தாமஸ், அஞ்சலி உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தை தில் ராஜு, போனி கபூர் ஆகியோர் இணைந்து தயாரித்துள்ளனர்.
இந்தியில் அமிதாப் பச்சனும், தமிழில் அஜித் குமாரும் நடித்த வக்கீல் கதாபாத்திரத்தில் தெலுங்கில் பவன் கல்யான் நடித்துள்ளார். தெலுங்கில் அவருக்கு ஏற்றவாறு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாண்டுகள் பிறகு வெளியாகும் பவன் கல்யான் திரைப்படம் இதுவென்பதால், கிட்டத்தட்ட திருவிழா போல இந்த படத்தை கொண்டாடுகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
தெலுங்கான மாநில ஜோகுலம்ப கட்டாவில் உள்ள ஒரு திரையரங்கில் 'வக்கீல் சாப்' திரைப்படத்தை காண குழுமிருந்தனர் பவன் கல்யான் ரசிகர்கள். 3 ஆண்டுகள் கழித்து பவன் கல்யானை திரையில் காண இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் பவன் கல்யாண் வரும் காட்சிக்கு முன்பே தொழில்நுட்ப கோளாரால் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு ஆளானார்கள் ரசிகர்கள்.
இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் திரையரங்கு இருக்கைகள் , கதவுகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை திரையரங்கு நிர்வாகம் வெளியில் அனுப்பி கதவை இழுத்து பூட்டியது. ஆனாலும் சற்றும் கோபம் தணியாத ரசிகர்கள் கற்களை கொண்டு திரையரங்கு கண்ணாடிகளை உடைத்ததோடு, பட்டாசுகளை கொளுத்தி திரையரங்கு மீதும் வீசினார்கள். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பவன் கல்யான் ரசிகர்களின் இத்தகைய அத்துமீறிய செயல் தெலுங்கு சினிமா வட்டாரத்தினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.
இந்தியில் அமிதாப் பச்சனும், தமிழில் அஜித் குமாரும் நடித்த வக்கீல் கதாபாத்திரத்தில் தெலுங்கில் பவன் கல்யான் நடித்துள்ளார். தெலுங்கில் அவருக்கு ஏற்றவாறு சில மாற்றங்களும் செய்யப்பட்டுள்ளன. இந்த படத்தில் பவன் கல்யாணுக்கு ஜோடியாக சிறப்பு தோற்றத்தில் நடிகை ஸ்ருதிஹாசன் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. மூன்றாண்டுகள் பிறகு வெளியாகும் பவன் கல்யான் திரைப்படம் இதுவென்பதால், கிட்டத்தட்ட திருவிழா போல இந்த படத்தை கொண்டாடுகிறார்கள் அவரின் ரசிகர்கள்.
தெலுங்கான மாநில ஜோகுலம்ப கட்டாவில் உள்ள ஒரு திரையரங்கில் 'வக்கீல் சாப்' திரைப்படத்தை காண குழுமிருந்தனர் பவன் கல்யான் ரசிகர்கள். 3 ஆண்டுகள் கழித்து பவன் கல்யானை திரையில் காண இருப்பதால் மிகுந்த எதிர்பார்ப்பில் இருந்தனர் ரசிகர்கள். ஆனால் பவன் கல்யாண் வரும் காட்சிக்கு முன்பே தொழில்நுட்ப கோளாரால் படம் பாதியில் நிறுத்தப்பட்டதால் மிகப்பெரிய ஏமாற்றத்திற்கு ஆளானார்கள் ரசிகர்கள்.
இதனால் அங்கு கூடியிருந்த ரசிகர்கள் திரையரங்கு இருக்கைகள் , கதவுகளை அடித்து நொறுக்கி துவம்சம் செய்தனர். இதனையடுத்து நீண்ட நேர போராட்டத்திற்கு பிறகு ரகளையில் ஈடுபட்ட ரசிகர்களை திரையரங்கு நிர்வாகம் வெளியில் அனுப்பி கதவை இழுத்து பூட்டியது. ஆனாலும் சற்றும் கோபம் தணியாத ரசிகர்கள் கற்களை கொண்டு திரையரங்கு கண்ணாடிகளை உடைத்ததோடு, பட்டாசுகளை கொளுத்தி திரையரங்கு மீதும் வீசினார்கள். இதனால் அந்த இடமே போர்க்களம் போல் காட்சி அளித்தது. பவன் கல்யான் ரசிகர்களின் இத்தகைய அத்துமீறிய செயல் தெலுங்கு சினிமா வட்டாரத்தினருக்கு அதிர்ச்சியாக அமைந்துள்ளது.