ஆப்நகரம்

சண்டையில் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய பவன் கல்யாண்

கர்நாடக மாநிலத்தில் தெலுங்கு ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களுடன் நடந்த மோதலில் பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார்.

TNN 25 Aug 2016, 3:44 pm
கர்நாடக மாநிலத்தில் கோலாரில் தெலுங்கு ஸ்டார் ஜூனியர் என்.டி.ஆர். ரசிகர்களுடன் நடந்த மோதலில் பவன் கல்யாணின் ரசிகர் ஒருவர் பரிதாபமாக உயிரிழந்தார். இறந்த ரசிகரின் குடும்பத்துக்கு நேரில் சென்று பவன் கல்யாண் ஆறுதல் கூறியுள்ளார்.
Samayam Tamil pawan kalyan pays visit to fans familywho died during a clash with fans of jr ntr in karnataka
சண்டையில் உயிரிழந்த ரசிகரின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறிய பவன் கல்யாண்




பவன் கல்யாண் மற்றும் ஜூனியர் என்.டி.ஆர். இவர்களில் யார் தெலுங்கு சூப்பர் ஸ்டார் என்ற விவாத்தில் இருவருக்கிடையே மோதல் ஆரம்பமாகியுள்ளது. பவன் கல்யாணின் ஜன சேனா பார்ட்டில் சார்பில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அவரது தொண்டர் வினோத் குமாரை (24) பேச அழைத்துள்ளனர். ஆனால், அங்கு வந்திருந்த ஜூனியர் என்.டி.ஆரின் ரசிகர்கள் ஆத்திரமடைந்து அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.

இந்த நிகழ்ச்சியைத் தொடர்ந்து, நரசபுராவில் உள்ள மதுபான கடையில் பவன் கல்யாணின் ரசிகர் வினோத்குமாருக்கும், என்.டி.ஆரின் ரசிகர் அக்ஷக்கும் இடையே மோதல் வந்துள்ளது. இதில் ஆத்திரமடைந்த அக்ஷய், வினோத்தை கத்தியால் குத்தியுள்ளார். இதில் ரத்த வெள்ளத்தில் துடி துடித்த வினோத் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார்.

இதன் காரணமாக தெலுங்கு சூப்பர் ஸ்டார் பவன் கல்யாண் தன் ரசிகனின் வீட்டுக்கு சென்று ஆறுதல் கூறி வருகிறார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்