ஆப்நகரம்

கொரோனா லாக்டவுன்: வீட்டை தானே துடைக்கும் நடிகை! அழுதபடி போட்ட புகைப்படம்

பிரபல நடிகை பாயல் ராஜ்புட் தனது வீட்டை தானே துணி வைத்து துடைத்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர் அழுதபடி இருக்கிறார்.

Samayam Tamil 13 Apr 2020, 5:36 pm
தற்போது கொரோனா வைரஸ் தொற்று காரணமாக ஊரடங்கு அமலில் உள்ளது. தமிழ்நாட்டில் ஏப்ரல் 14 வரை இருந்த ஊரடங்கு தற்போது ஏப்ரல் 30ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.
Samayam Tamil Payal Rajput


இந்த ஊரடங்களால் பல்வேறு துறைகளும் முழுமையாக முடங்கியுள்ளன. அதில் சினிமா துறையும் ஒன்று. இடைவெளி இன்று படங்களை நடித்து வந்த சினிமா நட்சத்திரங்களுக்கு லாக்டவுன் காரணமாக பல வாரங்கள் கட்டாய ஓய்வு கிடைத்துள்ளது.

வெளியில் செல்லாமல் வீட்டுக்குள்ளேயே இருக்க வேண்டும் என்பதால் பிரபலங்கள் பலரும் தாங்கள் செய்யும் பல விஷயங்களை வீடியோ அல்லது போட்டோ எடுத்து வெளியிட்டு வருகின்றனர்.

RX100 என்ற தெலுங்கு படத்தில் நடித்து புகழ் பெற்ற நடிகை பாயல் ராஜ்புட் தனது இன்ஸ்டாகிராமில் பக்கத்தில் சில புகைப்படங்களை பதிவிட்டுள்ளார். லாக்டவுன் என்பதால் அவரது வீட்டில் வேலை செய்யும் பெண் வரவில்லை. அதனால் இவரே வீட்டை துடைக்கிறார்.

Before-After என குறிப்பிட்டு தான் முன்னணி இருந்ததற்கும் தற்போது இருக்கும் நிலைமையையும் ஒப்பிட்டு புகைப்படம் வெளியிட்டுளளார் அவர்.

மற்றொரு புகைப்படத்தில் "I miss my maid" என குறிப்பிட்டு தனது வீட்டின் பணியாளரை மிஸ் செய்வதாக கூறி அழுவது போன்ற ஒரு புகைப்படத்தினை வெளியிட்டுளளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்