ஆப்நகரம்

பொது இடத்தில் பேனர் வைத்தால் மக்கள் தட்டிக்கேட்க வேண்டும்: கமல் ஹாசன்!

பிக் பாஸ் நிகழ்ச்சியின் போது பொது இடங்களில் பேனர், கட் அவுட் வைத்தால் பொது மக்கள் தட்டிக்கேட்க வேண்டும் என்று கமல் ஹாசன் தெரிவித்தார்.

Samayam Tamil 15 Sep 2019, 7:04 am
பிக் பாஸ் 3 நிகழ்ச்சி இறுதிகட்டத்தை எட்டியுள்ளது. இதில், நேற்றைய நிகழ்ச்சியின் போது கமல் ஹாசன் பள்ளிக்கரணையை சேர்ந்த இளம்பெண் சுபஸ்ரீ உயிரிழந்த சம்பவம் குறித்து பேசினார். இது குறித்து மேலும், அவர் கூறுகையில், வீட்டிற்குள் இருக்கும் போட்டியாளர்களுக்கு புகழ், விமர்சனம், வெறுப்பு, அன்பும் உடனுக்குடன் சென்று சேராது.
Samayam Tamil Kamal Haasan


ஆனால், வெளியிலிருக்கும் அவர்களது பெற்றோர்களுக்கு மட்டும் தான் அவமானம், சந்தோஷம் எல்லாமே. ஆனால், தற்போது போட்டியாளர்களின் குடும்பத்தார்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருக்கும் நிலையில், சுபஸ்ரீயின் குடும்பத்தினர் சோகத்தில் மூழ்கியுள்ளனர். அவருக்கு ஆறுதல் சொல்லும் முயற்சியல்ல. அவர்களாகவே மீண்டு வரவேண்டும். ஆறுதல் சொல்லுவது ஒருவிதமான சம்பிரதாயமாக இருக்கலாம். அதையும் மீறி இனி இதுபோன்று நிகழாமல் பாதுகாவலராக நாம் இருக்க வேண்டும் முயற்சிக்க வேண்டும்.

பேனர் விழுந்து ஒருவர் உயிரிழப்பது இது முதல் முறையல்ல. இதற்கு முன்னதாக கடந்த 2017ல், இது போன்று கோயம்புத்தூரில், ரகு என்பவர் பேனர் விழுந்து இறந்தார். பொது இடங்களில் இனிமேல், யாரும் பேனர் வைக்க வேண்டாம் என்று சட்டத்தின் வாயிலாக வலியுறுத்தியும் இதற்கு யாரும் செவி கொடுக்கவில்லை. இது அரசியல் பேனர் என்றால் அது இல்லை.

ஆனால், எல்லாமே அரசியல்தான். நம் வீட்டு திருமணமாக இருந்தாலும், அதனை வெளியில் கொண்டுவந்து வைத்துவிட்டால் அது பொதுமக்களை பாதிக்கிறது. அரசியல்வாதிகளை குற்றம் சாட்டுகிறோம் எனப்து ஒருபுறம் இருக்க, நம் வீட்டு திருமணம், பிறந்தநாள் ஆகியவற்றிற்கு இவ்வளவு பெரிய பேனர் வைக்க வேண்டிய அவசியமில்லை.

பிக் பாஸுக்கு மட்டும் பேனர் வைக்கிறீர்கள் என்றால், அதுவும், முன் அனுமதியோடு, எங்கு வைக்க வேண்டுமோ அந்த இடத்தில்தான் வைக்கப்படுகிறது. அது போன்று அவர்களும் செய்யலாம். ஆனால், தவறான இடத்தில் பேனரோ, கட் அவுட்டோ வைக்கப்பட்டால் இதனை மக்கள் தட்டிக்கேட்கலாம்.

கடந்த 30 வருத்திற்கு முன்பு எனது ரசிகர் கட் அவுட் வைக்கும் போது உயரத்தில் இருந்து கீழே விழுந்து இறந்தார். சாதாரண எலும்பு முறிவு ஏற்படக்கூடிய நிலையில், கூர்மையான வேல் அவரது கழுத்தில் குத்தி உயிரிழந்தார். அப்போதே இனி என் ரசிகர்கள் பால் குடம் எடுப்பது, மாலை போடுவது அதெல்லாம் வேண்டாம் என்று நான் கேட்டுக்கொண்டேன் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்