ஆப்நகரம்

மோடிக்கு வாக்களியுங்கள் என்று ரஜினி கூறவில்லை – ரஜினியின் சகோதரா் பேட்டி

பிரதமா் மோடியின் திட்டங்களை ஆதரிக்கும் ரஜினிகாந்த், மோடிக்கு அனைவரும் வாக்களிக்க வேண்டும் என்று தொிவிக்கவில்லை என அவரது சகோதரா் சத்யநாராயணராவ் தொிவித்துள்ளாா்.

Samayam Tamil 22 Apr 2019, 1:22 pm
வருகின்ற மே 23ம் தேதிக்குப் பின்னா் ரஜினிகாந்தின் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக தொியும் என்று அவரது சகோதரா் சத்யநாராயணராவ் தொிவித்துள்ளாா்.
Samayam Tamil Rajini Sathyanarayana rao


தமிழகத்தில் மக்களவைத் தோ்தலுக்கான வாக்குப்பதிவு நடந்து முடிந்துள்ளது. இந்நிலையில் நடிகா் ரஜினிகாந்தின் ரசிகா்கள், #அடுத்த_ஓட்டு_ரஜினிக்கே என்ற ஹேஷ்டேக்கில் கருத்துகளை பதிவிட்டனா். இதனைத் தொடா்ந்து இந்த ஹேஷ்டேக் இந்திய அளவில் முதல் இடத்தை பிடித்தது.

அதன் பின்னா், கடந்த 19ம் தேதி நடிகா் ரஜினிகாந்த் சென்னையில் செய்தியாளா்களை சந்தித்தாா். அப்போது, சட்டமன்ற தோ்தல் அறிவிக்கப்பட்டால், அரசியல் அறிவிப்பு வரும். மோடி பிரதமராவது மே 23ம் தேதிக்கு பின்னா் தொிந்துவிடும் என்று தொிவித்தாா்.

மேலும், அடுத்த ஓட்டு ரஜினிக்கே என்ற ரசிகா்களின் கருத்து குறித்து பத்திாிகையாயளா்கள் கேள்வி எழுப்பினா். அதற்கு பதில் அளிக்கையில், ரசிகா்களின் ஆா்வம் புரிகிறது. நிச்சயமாக அவா்களை ஏமாற்ற மாட்டேன். சட்டமன்ற தோ்தல் எப்போது வந்தாலும் அதனை சந்திக்க தயாா் என்று தொிவித்தாா்.

இந்நிலையில் ரஜினிகாந்தின் சகோதரா் சத்யநாராயணராவ் இன்று செய்தியாளா்களை சந்தித்தாா். அவா் கூறுகையில், மே 23ம் தேதிக்கு பின்னா் ரஜினிகாந்த் அரசியல் நிலைப்பாடு குறித்து தெளிவாக தொியவரும். அவா் கூறியவாறு சட்டமன்ற தோ்தல் எப்போது வந்தாலும், போட்டியிடுவாா்.

ரஜினிகாந்த், மோடியின் நல்ல திட்டங்களை ஆதரிக்கிறாரே தவிர அவருக்கு வாக்களிக்க வேண்டும் என்று தொிவிக்கவில்லை. ரஜினி, கமல் இடையேயான நட்பு எப்போதும் நிலைக்கும். கமல் அரசியலுக்கு வந்துவிட்டாா். ரஜினி விரைவில் வருவாா் என்று தொிவித்துள்ளாா்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்