இந்தாண்டு பொங்கல் பண்டிகை விருந்தாக ரஜினியின் ‘பேட்ட’ படமும், அஜித்தின் ‘விஸ்வாசம்’ படமும் ஒரே நாளில் வெளியானது. இந்த இரண்டு படங்களுமே மக்களிடையே அதிக பாராட்டுகளை பெற்றது. மேலும் இந்த படத்தின் டிக்கெட்களும் தற்போது விலை குறைந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. இந்நிலையில் இந்த இரு படங்களும் வெளியாகி 11 நாட்கள் ஆகிறது. மேலும் இந்த படங்கள் தமிழகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளதாக கூறப்படுகிறது. மாவட்ட ஆட்சியருக்கு உயர்நீதிமன்றம் கடந்த 10 தேதி முதல் 17 தேதி வரை ‘பேட்ட’, ‘விஸ்வாசம் ’திரைப்படங்கள் வெளியான திரையரங்குகளின் தினசரி வசூல் தொகையின் அறிக்கையைத்தாக்கல் செய்யுமாறு தற்போது உத்தரவிட்டுள்ளது.
‘பேட்ட’ & ‘விஸ்வாசம்’ படத்திற்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்!
சென்னை உயர்நீதிமன்றம் சமீபத்தில் வெளியான ‘பேட்ட’ மற்றும் ‘விஸ்வாசம்’ படத்தில் உண்மையான வசூல் நிலவரத்தை நீதிமன்றத்தில் தெரிவிக்க வேண்டும் என்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
Samayam Tamil 22 Jan 2019, 3:36 pm
ஹைலைட்ஸ்:
- ‘பேட்ட’, ‘விஸ்வாசம்’ படத்திற்கு உயர்நீதி மன்றம் நோட்டீஸ்!
- 10 - 17 தேதி வரை தினசரி வசூல் தொகை தாக்கல் செய்ய உத்தரவிட்டுள்ளது.