ஆப்நகரம்

நா.முத்துக்குமார் எழுதிய பாடலுக்கு தேசிய விருது கிடைக்கும்: இயக்குனர் நம்பிக்கை!

மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் ‘பெட்டிக்கடை’ என்ற படத்திற்கு எழுதிய பாடல் ஒன்றுக்கு கண்டிப்பாக தேசிய விருது கிடைக்கும் என்று கூறியுள்ளார் படத்தின் இயக்குனர் இசக்கி கார்வண்ணன்.

Samayam Tamil 6 Mar 2019, 4:36 pm
டைரக்டரும், நடிகருமான சமுத்திரக்கனி தற்போது தமிழில் பல படங்களில் ஹீரோவாகவும், குணச்சித்ர வேடங்களிலும் நடித்து வருகிறார். தற்போது அவர் நடிப்பில் விரைவில் வெளியாகவுள்ள படம் ‘பெட்டிக்கடை’. இந்தப் படத்தில் கதாநாயகனாக நடிகர் சமுத்திரக்கனி நடித்துள்ளார். சமுத்திர பாண்டி என்ற வித்தியாசமான புரட்சிகர சிந்தனை கொண்ட ஆசிரியராக அவர் நடித்துள்ளார்.
Samayam Tamil na-muthukumar


இவருடன் இணைந்து நடிகர் வீரா நடித்துள்ளார். மேலும் படத்தில் சாந்தினி, அஸ்மிதா, வர்ஷா, சுந்தர், ‘நான் கடவுள்’ ராஜேந்திரன், ஆர்.சுந்தர்ராஜன், திருமுருகன், ஆர்.வி.உதயகுமார், ராஜேந்திரநாத், ஐஸ்வர்யா, செந்தில் உட்பட பலரும் நடித்துள்ளனர்.

இந்தப் படத்திற்கு மரியா மனோகர் இசையமைத்துள்ளார். கதை, திரைக்கதை, வசனம் எழுதி டைரக்டு செய்திருக்கிறார், இசக்கி கார்வண்ணன்.

இந்தப் படம் பற்றி இயக்குனர் இசக்கி கார்வண்ணன் கூறுகையில், “இந்த படத்துக்காக மறைந்த கவிஞர் நா.முத்துக்குமார் எழுதிய “சுடலமாடசாமிகிட்ட என்ன வேண்டிக்கிட்ட சொல்லு புள்ள” என்ற பாடலை கிராமத்து வாசனையுடன் எழுதியிருக்கிறார். ஏற்கனவே தேசிய விருதுகளை பெற்ற கவிஞர் நா.முத்துக்குமாருக்கு இந்த பாடலுக்காகவும் தேசிய விருது கிடைக்கும் என்று எதிர்பார்க்கிறோம்” என்கிறார், டைரக்டர் இசக்கி கார்வண்ணன்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்