ஆப்நகரம்

சூர்யாவின் காப்பானுக்கு எதிரான வழக்கு தள்ளுபடி!

சூர்யாவின் காப்பான் படத்திற்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் போதிய ஆதாரம் இல்லாததால், இந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

Samayam Tamil 13 Sep 2019, 12:41 am
இயக்குநர் கேவி ஆனந்த் இயக்கத்தில் சூர்யா, ஆர்யா, மோகன் லால், சாயிஷா ஆகியோர் பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் காப்பான். வரும் 20 ஆம் தேதி வெளியாக இருந்த இப்படத்திற்கு தடை கேட்டு சென்னை குரோம்பேட்டையைச் சேர்ந்த கதாசிரியர் ஜான் சார்லஸ் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து மனு தாக்கல் செய்திருந்தார்.
Samayam Tamil Kaappaan Suriya


அவர் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடந்த 2016 ஆம் ஆண்டு சரவெடி என்ற தலைப்பில் கதை எழுதி, அதனை இயக்குநர் கேவி ஆனந்திடம் கொடுத்துள்ளதாக அவர் கூறியிருந்தார். மேலும், அந்தக் கதையைத்தான் தற்போது காப்பான் என்ற டைட்டிலில் இயக்குநர் எடுத்துள்ளார். ஆதலால் காப்பான் படத்திற்கு தடை விதிக்க வேண்டும் என்று சார்லஸ் தாக்கல் செய்த மனுவில் கூறப்பட்டிருந்தது.

தொடைகளுக்கு நடுவில் தலையை வைத்த ஜிவியின் பேச்சுலருக்கு எதிர்ப்பு!

வரும் 19 ஆம் தேதி பிகில் இசை வெளியீடு: உறுதி செய்த தயாரிப்பாளர்!

Thala60: அனிகா தான் என் மகளாக நடிக்கணும்: கேட்டு வாங்கிய தல!

இந்த நிலையில், இந்த மனுதொடர்பான விசாரணை நேற்று நீதிபதி சதீஷ்குமார் தலைமையில் நடந்தது. இதில், இப்படத்தை தயாரித்துள்ள லைகா நிறுவனம் சார்பில் பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அந்த மனுவில், சார்லஸின் சரவெடி படத்தின் கதையும், காப்பான் படத்தின் கதையும் வேறு வேறு என்று தெரிவிக்கப்பட்டது.

இதே போன்று, இயக்குநர் தரப்பிலும், பதில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அவர் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது: தான் எப்போதும் அடையாளம் தெரியாதவர்களிடம் கதை கேட்பது இல்லை. சரவெடி கதை, காப்பான் கதை வெவ்வேறு என்று கூறப்பட்டுள்ளது.

இந்த மனுவை விசாரித்த பிறகு, நீதிபதி, சதீஷ் குமார், மனுதாரர் ஜான் சார்லஸின் குற்றச்சாட்டிற்கு போதுமான ஆதாரம் இல்லை. ஆதலால், காப்பான் படத்திற்கு தடை விதிக்க முடியாது என்று கூறி இந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்படத்தில் நடிகர் சூர்யா சிறப்பு பாதுகாப்புக் குழு அதிகாரியாக நடித்துள்ளார். மோகன்லால் பிரதம மந்திரியாக நடித்துள்ளார். நடிகர் ஆர்யா பிரதம மந்திரியின் மகனாக நடித்துள்ளார். இவர்களுடன் சமுத்திரக்கனியும், தலைவாசல் விஜய்யும் நடித்துள்ளனர்.


இப்படத்தை லைகா நிறுவனம் தயாரித்துள்ளது, அந்தோனி எடிட்டிங் செய்துள்ளார். ஹாரிஸ் ஜெயராஜ் இசையமைத்துள்ளார். என்ஜிகே படம் எதிர்பார்த்த வரவேற்பை பெறாததால் இப்படத்தின் மீது மிகப்பெரும் நம்பிக்கையில் இருக்கிறார் சூர்யா.

அடுத்த செய்தி

டிரெண்டிங்