ஆப்நகரம்

நான் மொரட்டு சிங்கிள், எனக்கு கல்யாணம் இல்லை: பிரேம்ஜி!

பின்னணி பாடகரும், நடிகருமான பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம் நடக்க இருப்பதாக வெளியான தகவல் பொய்யானது என அவரே கூறியுள்ளார்.

Samayam Tamil 22 Aug 2019, 2:05 pm
சென்னை 28”, “சரோஜா”, “கோவா”, “மங்காத்தா போன்ற வெற்றிப் படங்களில் காமெடி கதாப்பாத்திரத்தில் நடித்து பிரபலமானவர் பிரேம்ஜி. இவர் பிரபல இயக்குநரும், இசையமைப்பாளருமான கங்கை அமரனின் இளைய மகன்.பிரேம்ஜி தற்போது அண்ணன் வெங்கட் பிரபுவின் “பார்ட்டி”மற்றும் “ஜோம்பி”படத்தில் இசையமைத்துள்ளார்.
Samayam Tamil Premgi Amaren Marriage


40 வயதாகும் பிரேம்ஜிக்கு திருமணம் ஆகவில்லை என்று அவர் கவலைப்பட்டதை விட, அவரது ரசிகர்களும், நண்பர்களும் தான் அதிகமாக கவலைப்பட்டு வருகின்றனர். பிரேம்ஜிக்கு அவரது குடும்பத்தார் பெண் தேடி வருகின்றனர்.

மேலும் படிக்க: சிம்பா வந்துவிட்டான்: ஆண் குழந்தை பிறந்த சந்தோஷத்தில் சுஜா வருணி – சிவக்குமார்!

இந்த நிலையில் சமீபத்தில் ஆணும் பெண்ணும் திருமணக்கோலத்தில் நிற்கும் புகைப்படத்துடன் ‘கேம் ஓவர் என்ற வாசகம் அடங்கிய டி-சர்ட்டை போட்டுக்கொண்டு ஒரு புகைப்படத்தை தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டிருந்தார் பிரேம்ஜி.

Also Read This: சினிமாவில் அறிமுகப்படுத்தியவரின் மரணத்திற்கு செல்லாத விக்ரம்!

இதன் மூலம் அவரது சிங்கிள் வாழ்க்கை முடிவுக்கு வந்ததாகவும் அவருக்கு கூடிய விரைவில் திருமணம் நடக்க உள்ளதாக ரசிகர்கள் கூறி வந்தனர். இந்த நிலையில் இன்று நடைபெற்றயாஷிகா ஆனந்த், யோகிபாபு நடிப்பில் உருவாகியுள்ள ஜோம்பி படத்தின் இசை விழாவில் கலந்து கொண்ட பிரேம்ஜி மொரட்டு சிங்கிள் எனும் டிசர்ட் அணிந்து வந்தார்.


மேலும் மேடையில் பேசிய அவர்.... நான் இன்னும் மொரட்டு சிங்கிள் தான் எனக்கு கல்யாணம் என வந்த தகவல் பொய்யானது. கேம் ஓவர் என நான் போஸ்ட் செய்ததன் காரணம் திருமணம் ஆனால் கேம் ஓவர் எனும் அர்த்தத்தில் தான் எனக்கு கல்யாணம் இல்லை. யாரும் நம்ப வேண்டாம் என்றார்.

இதையும் படிங்க: Rajinikanth: ரஜினி, சிரஞ்சீவி, அமிதாப்பச்சன் இணையும் படம்!

இதனால் பிரேம்ஜிக்கு கல்யாணம் என பரவிய தகவல் பொய்யாகியுள்ளது. மேலும் பேசிய அவர் யாஷிகா ஆனந்த் எனக்கு மிகவும் பிடித்த நடிகை அவரது படத்திற்கு இசையமைத்தது மறக்க முடியாத அனுபவம் என்றார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்