ஆப்நகரம்

விளக்கேற்றச் சொன்ன ஜீவா: சங்கின்னு திட்டும் நெட்டிசன்ஸ்

கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் ஒற்றுமையை காட்ட இன்றிரவு 9 மணிக்கு தீபம் ஏற்றச் சொன்ன நடிகர் ஜீவாவை சினிமா ரசிகர்கள் விளாசியுள்ளனர்.

Samayam Tamil 5 Apr 2020, 4:38 pm
கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் ஒற்றுமையை காட்ட இன்றிரவு 9 மணிக்கு தீபம் ஏற்றச் சொன்ன நடிகர் ஜீவாவை சினிமா ரசிகர்கள் விளாசியுள்ளனர்.
Samayam Tamil please light diyas jiiva requests people
விளக்கேற்றச் சொன்ன ஜீவா: சங்கின்னு திட்டும் நெட்டிசன்ஸ்



ஜீவா

கொரோனா இருளை அகற்ற இன்றிரவு 9 மணிக்கு வீட்டு வாசலில் விளக்கு வைக்குமாறு பிரதமர் மோடி நாட்டு மக்களை கேட்டுக் கொண்டுள்ளார். இந்நிலையில் நடிகர் ஜீவா ட்விட்டரில் வெளியிட்டுள்ள வீடியோவில் கூறியிருப்பதாவது, இந்த உலகத்தையே அச்சுறுத்தி வர கொரோனா கொடிய வைரஸை ஒத்துமையா இருந்து துரத்தி அடிப்போம்னு எல்லோருக்கும் நம்பிக்கை கொடுப்பதற்காக, மக்கள் அனைவரையும் தீபங்கள் ஏற்ற வேண்டும் என்று மாண்புமிகு பிரதமர் மோடி அவர்கள் நம்மை அழைத்திருக்கிறார். ஜனதா கர்ஃபியூ அன்று டாக்டர்களுக்கு நன்றி சொல்ல நாம் காட்டின அதே ஒற்றுமையை ஏப்ரல் 5ம் தேதி அதாவது இன்று இரவு 9 மணிக்கு 9 நிமஷம் அவரவர் வீட்டில் தீபம் ஏற்றியோ, மெழுகுவர்த்தி ஏற்றியோ, செல்போன் டார்ச் அடித்தோ இந்த கொரோனாவுக்கு எதிரான போராட்டத்தில் நம் ஒற்றுமையை காட்டுவோம் என்றார்.

Twitter-Jiiva

ஜிப்ஸி

ராஜுமுருகன் இயக்கத்தில் ஜீவா நடித்த ஜிப்ஸி படத்தை பார்த்தவர்கள் நீயாய்யா, இப்படி பேசுற. அவசரப்பட்டு உங்களை நல்லவர் என்று நினைத்துவிட்டோமே. இந்த வீடியோவை பார்த்தால் ராஜுமுருகன் எவ்வளவு வருத்தப்படுவார் என்று தெரிவித்துள்ளனர்.

Twitter-இனியவன் 💙

சங்கி

மோடியின் பேச்சை கேட்டு விளக்கு வைப்போம் என்று ஒரு வார்த்தை கூறியதற்காக ஜீவாவை சங்கி என்று விமர்சிக்கிறார்கள். ஜிப்ஸி படத்தில் கருத்தா பேசிட்டு கடைசியில விளக்கு வைக்கச் சொல்லி எங்களை அதிர வைத்துவிட்டீர்களே ஜீவா என்று தான் பலரும் கூறியுள்ளனர்.

Twitter-Arul Ramasamy

கிண்டல்

அவரு புடிக்கச் சொன்னாராம் இவரு புடிச்சாராம் என்று கவுண்டமணி சொன்ன வசன வீடியோவை வெளியிட்டு ஜீவாவை கலாய்த்துள்ளார்கள்.

Twitter-பெரியாரின் கைத்தடி

அடுத்த செய்தி

டிரெண்டிங்