ஆப்நகரம்

Meena: கணவரை இழந்த பிறகு முதல்முறையாக மனம் திறந்த மீனா.. உருக்கமான வேண்டுகோள்!

தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என்று ஊடகங்களுக்கு நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.

Samayam Tamil 2 Jul 2022, 12:02 pm
தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை ஒளிபரப்ப வேண்டாம் என நடிகை மீனா வேண்டுகோள் விடுத்துள்ளார்.
Samayam Tamil please stop broadcasting false information actress meena
Meena: கணவரை இழந்த பிறகு முதல்முறையாக மனம் திறந்த மீனா.. உருக்கமான வேண்டுகோள்!



சுயநினைவில்லாமல்

நடிகை மீனாவின் கணவர் வித்யா சாகர் கடந்த செவ்வாய்க்கிழமை இரவு உடல்நலக்குறைவால் காலமானார். கடந்த 6 மாதங்களாக நுரையீரல் தொற்றால் பாதிக்கப்பட்டிருந்த வித்யா சாகர் கடந்த 3 மாதங்களாக சுயநினைவின்றி எக்மோ சிகிச்சையில் இருந்து வந்தார்.

Meena: மீனா கேட்ட 'அந்த' வார்த்தை... நொறுங்கி போயிட்டேன்... கண்கலங்கும் பிரபலம்!

பெரும் அதிர்ச்சி

அவருக்கு உறுப்பு மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டிய கட்டாயம் ஏற்பட்டதால், மாற்று நுரையீரலுக்காக காத்திருந்தனர் மருத்துவர்கள். ஆனால் மாற்று நுரையீரல் கிடைப்பதில் தாமதம் ஏற்பட்டது. இந்நிலையில் அவருடைய நுரையீரல் மற்றும் இதயம் செயலிழந்து கடந்த செவ்வாய்க்கிழமை இரவு வித்யா சாகரின் உயிர் பிரிந்தது. 48 வயதே ஆன வித்யா சாகரின் மரணம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

Meena: எந்திரிங்க அப்பா... வித்யாசாகரின் உடலை கட்டிப்பிடித்து கதறிய நைனிகா!

மீனா உருக்கம்

கடந்த புதன்கிழமை வித்யாசாகரின் உடல் பெசன்ட் நகர் மின் மயானத்தில் தகனம் செய்யப்பட்டது. இறுதிச்சடங்குகள் அனைத்தையும் நடிகை மீனாவே செய்து முடித்தார். இந்நிலையில் தனது கணவர் மரணம் குறித்து தவறான தகவல்களை பரப்ப வேண்டாம் என இன்ஸ்டாகிராம் பக்கத்தில் உருக்கமாக அறிக்கை வெளியிட்டுள்ளார் மீனா.

மீனா டூ நைனிகா... அமேஸிங் அம்மா மகள்!

நிறுத்துங்கள்

அந்த அறிக்கையில் நடிகை மீனா தெரிவித்திருப்பதாவது “எனது அன்புக் கணவர் வித்யா சாகரை இழந்து தவித்துக் கொண்டிருக்கிறேன். அனைத்து ஊடகங்களும் எங்களின் தனியுரிமைக்கு மதிப்பளித்து, இந்தச் சூழலில்அனுதாபம் காட்டுமாறு கேட்டுக்கொள்கிறேன். தயவு செய்து இந்த விஷயத்தில் தவறான தகவல்களை ஒளிபரப்புவதை நிறுத்துங்கள்.

Meena: ஆசை கணவரின் அஸ்தியை காத்திருந்து பெற்ற மீனா... கையில் பெட்டியுடன்.. வைரலாகும் போட்டோ!

இக்கட்டான நேரம்

இந்த இக்கட்டான நேரத்தில், எங்கள் குடும்பத்திற்கு உதவிய மற்றும் துணை நின்ற அந்த நல்ல உள்ளங்களுக்கு எனது நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். தங்களால் இயன்றவரை முயற்சித்த அனைத்து மருத்துவக் குழுவினருக்கும், நமது முதல்வர், சுகாதார அமைச்சர், ராதாகிருஷ்ணன் ஐஏஎஸ், சக ஊழியர்கள், நண்பர்கள், குடும்பத்தினர், ஊடகங்கள் மற்றும் அன்பையும் பிரார்த்தனைகளையும் அனுப்பிய என் அன்பு ரசிகர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.” இவ்வாறு நடிகை மீனா தெரிவித்துள்ளார்.

Meena: மகன் இல்லாத குறையை தீர்த்த மீனா.. இடுப்பில் துண்டுடன் கணவருக்கு இறுதிச்சடங்கு!

அடுத்த செய்தி

டிரெண்டிங்