Sreejith Ravi:2 குழந்தைகளிடம் மர்ம உறுப்பை காட்டிய வில்லன் நடிகர் கைது
பிரபல வில்லன் நடிகரான ஸ்ரீஜித் ரவி போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ளார். 2 குழந்தைகளின் பெற்றோர் அளித்த புகாரின்பேரில் கைது செய்யப்பட்டிருக்கிறார்.
Samayam Tamil 7 Jul 2022, 11:12 am
கேரளாவை சேர்ந்தவர் ஸ்ரீஜித் ரவி. மலையாளம் தவிர்த்து தமிழ் படங்களிலும் நடித்து வருகிறார். பெரும்பாலும் வில்லன் கதாபாத்திரங்களில் நடிப்பார். விஷாலின் கதகளி, ஆர்யாவின் வேட்டை, கும்கி உள்ளிட்ட தமிழ் படங்களில் நடித்திருக்கிறார். கேரள மாநிலம் திருச்சூரில் இரண்டு குழந்தைகளுக்கு முன்பு தன் ஆடையை அவிழ்த்து மர்ம உறுப்பை காட்டியதாக காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
காரில் இருந்தபடி அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் யார் என்று அந்த குழந்தைகளுக்கு சொல்லத் தெரியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானதை பார்த்த போலீசார், குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என்று கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் இன்று கைது செய்திருக்கிறார்கள். எனக்கு மன ரீதியான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஸ்ரீஜித் ரவி.
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டில் பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் முன்பு தன் காரில் இருந்தபடியே ஆடையை அவிழ்த்து அந்தரங்க உறுப்பை காட்டியதற்காக ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார். அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், அந்த குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
பிரபல மலையாள நடிகர் டி.ஜி. ரவியின் மகன் தான் ஸ்ரீஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
Silk Smitha:பலர் என் உடலை யூஸ் பண்ணிக்கிட்டாங்க, ஏன் கடவுளே என்னை படைச்ச?: சில்க் ஸ்மிதாவின் கடைசி கடிதம்
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
காரில் இருந்தபடி அநாகரீகமாக நடந்து கொண்ட நபர் யார் என்று அந்த குழந்தைகளுக்கு சொல்லத் தெரியவில்லை. இதையடுத்து அப்பகுதியில் இருந்த சிசிடிவி கேமராக்களில் பதிவானதை பார்த்த போலீசார், குழந்தைகளிடம் தகாத முறையில் நடந்து கொண்டவர் நடிகர் ஸ்ரீஜித் ரவி என்று கண்டுபிடித்தனர்.
இதையடுத்து ஸ்ரீஜித் ரவியை போக்சோ சட்டத்தின்கீழ் இன்று கைது செய்திருக்கிறார்கள். எனக்கு மன ரீதியான பிரச்சனைகள் இருக்கிறது. அதற்கு சிகிச்சை பெற்று வருகிறேன் என்று வாக்குமூலம் அளித்திருக்கிறார் ஸ்ரீஜித் ரவி.
முன்னதாக கடந்த 2016ம் ஆண்டில் பள்ளிக்கு சென்ற சிறுவர்கள் முன்பு தன் காரில் இருந்தபடியே ஆடையை அவிழ்த்து அந்தரங்க உறுப்பை காட்டியதற்காக ஸ்ரீஜித் ரவி கைது செய்யப்பட்டார். அநாகரீகமாக நடந்து கொண்டதுடன், அந்த குழந்தைகளுடன் சேர்ந்து புகைப்படங்கள் எடுக்கவும் முயற்சி செய்திருக்கிறார்.
பிரபல மலையாள நடிகர் டி.ஜி. ரவியின் மகன் தான் ஸ்ரீஜித் என்பது குறிப்பிடத்தக்கது.
Silk Smitha:பலர் என் உடலை யூஸ் பண்ணிக்கிட்டாங்க, ஏன் கடவுளே என்னை படைச்ச?: சில்க் ஸ்மிதாவின் கடைசி கடிதம்