ஆப்நகரம்

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாரதிராஜாவை கைது செய்ய மீது போலீசில் புகார்!

தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இயக்குனர் பாரதிராஜா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.

TNN 26 Oct 2017, 4:09 pm
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய இயக்குனர் பாரதிராஜா மீது போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது.
Samayam Tamil police compaints about bharathiraja
தேசிய பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பாரதிராஜாவை கைது செய்ய மீது போலீசில் புகார்!


இயக்குனர் பாரதிராஜாவை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யக் கோரி விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த வக்கீல் ராஜ்குமார், சென்னை போலீஸ் கமிஷனர் அலுவலகத்தில் புகார் அளித்தார். அவர் அளித்த புகாரில் ....

"எனது தாய்மொழி தெலுங்கு. எங்கள் முதாதையர்கள் பல நூறு ஆண்டுகளாக விழுப்புரம் மாவட்டம் டி.எடையார் கிராமத்தில் வசித்து வருகின்றனர். இப்போது எங்கள் குடும்பம் வசிக்கிறது. இதுதான் எங்கள் சொந்த மண். இயக்குனர் பாரதிராஜா ஒரு பேட்டியில், ‘பிற மொழி பேசுவோர் தமிழகத்துக்கு வரலாம். போகலாம். நடிகர்களாக இருந்தால் சினிமாவில் நடிக்கலாம். ஆனால் தமிழகத்தையே ஆள நினைப்பது தவறு. தமிழகத்திலேயே பிறந்து இருந்தாலும் பிற மொழி பேசுவோர், தமிழகத்தை ஆள விட மாட்டோம். ரஜினிகாந்த் உள்பட யாராக இருந்தாலும் அவர்களுக்கு இது பொருந்தும்‘ என்று பேசியுள்ளார்.

இயக்குனர் பாரதிராஜாவின் பேச்சு இந்திய இறையாண்மைக்கும் தேசிய ஒருமைப்பாட்டுக்கும் குந்தகம் விளைவிக்கும் வகையில் உள்ளது. எனவே அவரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்ய வேண்டும்’’ என்று புகார் மனுவில் கூறியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்