ஆப்நகரம்

ராகவா லாரன்ஸ் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!

ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ராகவா லாரன்ஸ் நடத்த இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.

TNN 2 Mar 2017, 1:26 pm
ஹைட்ரோ கார்பன் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சென்னையில் ராகவா லாரன்ஸ் நடத்த இருந்த போராட்டத்திற்கு காவல்துறை அனுமதி மறுத்துள்ளது.
Samayam Tamil police denied permission for rahava lawarances protest
ராகவா லாரன்ஸ் போராட்டத்திற்கு அனுமதி மறுப்பு..!


ஹைட்ரோ கார்பன் எடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்து நெடுவாசல் கிராமத்தில் 15 வது நாளாக போராட்டம் நடைபெற்று வருகிறது.இந்த போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து,சென்னை வள்ளுவர் கோட்டத்தில் தனது ஆதரவாளர்களுடன் போராட்டம் நடத்த இருப்பதாக நடிகர் ராகவா லாரன்ஸ் அறிவித்திருந்தார்.இதற்காக முறையான காவல்துறை அனுமதியையும் அவர் பெற்றிருந்தார்.

இதன்படி இன்று காலை வள்ளுவர் கோட்டம் பகுதிக்கு நடிகர் ராகவா லாரன்ஸ் தனது ஆதரவாளர்களுடன் வந்திருந்தார்.ஆனால் அங்கு வந்த காவல்துறையினர் சென்னைக்கு குடியரசுத் தலைவர் வருவதால் ,போராட்டத்திற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளனர்.இதனால் அதிருப்தி அடைந்த ராகவா லாரன்ஸ் மற்றும் அவரது ஆதரவாளர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Police denied permission for Rahava Lawarance's protest

அடுத்த செய்தி

டிரெண்டிங்