ஆப்நகரம்

தனுஷ் தங்கள் மகன் என்று உரிமை கொண்டாடும் மேலூர் தம்பதியிடம் 2 மணி நேரம் விசாரணை!

நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கொண்டாடும் மேலூர் தம்பதியிடம் காவல்துறை டி.எஸ்.பி 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.

Samayam Tamil 5 Jul 2019, 4:36 pm
நடிகர் தனுஷ் தங்கள் மகன் என உரிமை கொண்டாடும் மேலூர் தம்பதியிடம் காவல்துறை டி.எஸ்.பி 2 மணி நேரம் விசாரணை நடத்தியுள்ளார்.
Samayam Tamil dhanush


மதுரை மாவட்டம் மேலூர் மலம்பட்டியை சேர்ந்த கதிரேசன் - மீனாட்சி தம்பதியின் மூத்த மகன் கலைச்செல்வன் காணாமல் போனதாகவும், தற்போது பிரபல சினிமா நடிகராக உள்ள தனுஷ் தான் தங்கள் மகன் என உரிமை கோரி மேலூர் நீதிமன்றம் மற்றும் மதுரை உயர்நீதிமன்ற கிளைகளில் வழக்கு தொடரப்பட்டு விசாரணை நடைபெற்று வந்தன.

மேலும் வழக்கு தொடர்பாக தனுஷ் தரப்பினர் நீதிமன்றத்தில் போலியான ஆவணங்கள் தாக்கல் செய்துள்ளதாகவும் மேலூர் தம்பதியினர் தரப்பில் குற்றம்சாட்டு மனு அளித்திருந்தனர். இந்நிலையில் இயக்குநர் கஸ்தூரி ராஜா, காவல்துறை அதிகாரிகளிடம், மேலூர் தம்பதியினர் கூறிவரும் காணமல் போன (கலைச்செல்வன் ) மகனை கண்டுபிடிக்க கோரி மனு அளித்திருந்தாக கூறப்படுகின்றது.

இந்நிலையில் இது தொடர்பாக கதிரேசன் - மீனாட்சி தம்பதியினரை திடீரென மேலூர் காவல்துறை துணை கண்காணிப்பாளர் அலுவலகத்திற்கு வரவழைக்கப்பட்டு மேலூர் டி.எஸ்.பி சுபாஷ் சுமார் 2 மணிநேரமாக விசாரணை நடத்தினார். தனுஷ் தங்கள் மகன் என கூறி தங்கள் தரப்பு வாதங்களை டி.எஸ்.பியிடம் மேலூர் தம்பதியினர் முன்வைத்து, தனுஷ் வழக்கு தொடர்பான நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட சில ஆவணங்களை காண்பித்துள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்