ஆப்நகரம்

ஒன்றிய அரசுக்கு எதிராக பேசிய பெண் இயக்குனர்: தேசத்துரோக வழக்கு பதிந்த போலீசார்!

லட்சத்தீவில் கொரோனாவை ஒன்றிய அரசு பரப்பியதாக கூறிய பெண் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது தேசத்துரோக வழக்கை பதிவு செய்துள்ளனர் லட்சத்தீவு போலீசார்.

Samayam Tamil 11 Jun 2021, 12:18 pm
அண்மையில் லட்சத்தீவுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் பல ஹேஸ்டாக்குகள் வலம் வந்தன. ஒன்றிய அரசு லட்சத்தீவுக்கு புதிய நெருக்கடி கொடுத்து வருவதாக போராட்டங்களும் நடைபெற்று வருகின்றன. இந்நிலையில் இந்த விவாகாரத்தில் பெண் இயக்குனர் ஒருவர் லட்சத்தீவில் ஒன்றிய அரசு கொரோனாவை பரப்பியதாக கூறியுள்ளது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. மேலும் அந்த பெண் இயக்குனருக்கு புகாரும் அளிக்கப்பட்டுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil Aisha_Sultana
Aisha_Sultana


லட்சத்தீவை காப்பாற்றுங்கள் என கேரள நடிகர்கள் மற்றும் நடிகைகள் பலரும் குரல் எழுப்பி வருகின்றனர். லட்சத்தீவில் ஒன்றிய அரசு நில உரிமைகள் தொடர்பான விதிகளில் மாற்றம் கொண்டு வர உள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து பொது மக்கள் பலரும் போராட்டத்தில் குதித்துள்ளனர். இதுவரை லட்சத்தீவில் இருந்து கேரளாவுக்கு நடைபெற்று வந்த சரக்கு போக்குவரத்து, இனி கேரளாவில் இருந்து மங்களூருவுக்கு மாற்றப்பட உள்ளது.

இப்போ கவலைப்பட்டு என்ன பிரயோஜனம்: வருத்தப்படும் மீனாவிற்கு ஆறுதல் கூறும் ரசிகர்கள்!
இதற்கு கேரள அரசியல் கட்சி தலைவர்களும், பிரபலங்களும் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டிவி விவாதம் ஒன்றில் கலந்து கொண்ட மலையாள பெண் இயக்குனரும், மாடலுமான ஆயிஷா சுல்தானா, லட்சத்தீவில் இதுவரை கொரோனா பரவல் இல்லாமல் இருந்ததாகவும் ஒன்றிய அரசு தான் லட்சத்தீவில் கொரோனா பரவ காரணம் என்றும் சர்ச்சைக்குரிய கருத்தை தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் லட்சத்தீவை சேர்ந்த பாஜக தலைவர் அப்துல் காதர் இது தொடர்பாக கவரட்டி காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்துள்ளார். இதனை தொடர்ந்து போலீசார் இயக்குநர் ஆயிஷா சுல்தானா மீது 124A மற்றும் 153B உள்ளிட்ட பிரிவுகளில் போலீசார் வழக்கு தொடர்ந்துள்ளனர். விரைவில் இதுதொடர்பாக ஆயிஷா சுல்தானாவிடம் போலீசார் விசாரணை மேற்கொள்ள உள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

அடுத்த செய்தி

டிரெண்டிங்