ஆப்நகரம்

காவ்யா மாதவனை கைது செய்ய திட்டமில்லை: போலீஸார் உறுதி!

நடிகையைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் நடிகை காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என, போலீஸ் தரப்புத் தெரிவித்துள்ளது. இதனால் இவரது முன்ஜாமீன் மனு முடிவிற்கு வந்தது.

TNN 26 Sep 2017, 4:15 pm
கேரளா: நடிகையைக் கடத்தி பாலியல் ரீதியாக துன்புறுத்திய வழக்கில் நடிகை காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை என, போலீஸ் தரப்புத் தெரிவித்துள்ளது. இதனால் இவரது முன்ஜாமீன் மனு முடிவிற்கு வந்தது.
Samayam Tamil police has confirmed that they have no idea of arresting
காவ்யா மாதவனை கைது செய்ய திட்டமில்லை: போலீஸார் உறுதி!


நடிகை பாலியல் வழக்கில் நடிகர் திலீப் கைதுசெய்யப்பட்டு, சிறையில் உள்ளார். இவரது இரண்டாவது மனைவி, காவ்யா மாதவனிடம், போலீசார் விசாரணை நடத்தினர். அவரது வீடுகளிலும், அலுவலகங்களிலும் சோதனையிட்டனர்.

குற்றவாளி பல்சர் சுனில், விசாரணையின் போது மேடம் என கூறியது, காவ்யா மாதவனாக இருக்கலாம் எனக் கருதப்பட்டது. இதனால், காவ்யா மாதவன் கைது செய்யப்படக்கூடும் என, கருதப்பட்டது.
இதனால், காவ்யா மாதவன் முன் ஜாமின் கோரி, கொச்சி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

ஆனால் போலீசார், காவ்யா மாதவனை கைது செய்யும் திட்டம் இல்லை எனவும், இந்த வழக்கில் அவர், எதிரியாக சேர்க்கப்படவில்லை எனவும் நீதிமன்றத்தில் தெரிவித்ததையடுத்து நீதிபதிகள், காவ்யா மாதவனின் முன்ஜாமின் மனுவை முடித்து வைத்து உத்தரவிட்டனர்.


Police has confirmed that they have no idea of arresting Kavya Madhavan.

அடுத்த செய்தி

டிரெண்டிங்