ஆப்நகரம்

Vijay: தளபதி 63 படப்பிடிப்பை பார்க்க வந்த ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி!

சென்னை காசிமேடு பகுதியில் நடந்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யைக் காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 20 Mar 2019, 2:19 pm
சென்னை காசிமேடு பகுதியில் நடந்து வரும் தளபதி 63 படத்தின் படப்பிடிப்பின் போது விஜய்யைக் காண வந்த ரசிகர்கள் மீது போலீசார் தடியடி தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Samayam Tamil thalapathy 63


தமிழ் சினிமாவில் மாஸ் ஹீரோ தளபதி தற்போது அட்லி இயக்கத்தில் தனது 63ஆவது படத்தில் பிஸியாக நடித்து வருகிறார். இப்படத்தில், லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, விஜய்க்கு ஜோடியாக நடித்து வருகிறார். மேலும், யோகி பாபு, ஆனந்தராஜ், டேனியல் ஆகியோர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.

அண்மையில், தளபதி 63 படத்தின் படப்பிடிப்பில் நயன்தாரா கலந்து கொண்டார். தற்போது, காசிமேடு பகுதியில் உள்ள கடற்கரை ஏரியாவில் விஜய், நயன்தாரா நடிக்கும் காட்சிகள் படமாக்கப்பட்டு வருகிறது. அப்போது எடுக்கபட்ட வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. விஜய், அஜித் படம் என்றாலே ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். அவர்கள் எங்கு சென்றாலும், அங்கு அவர்களை காண்பதற்கு ஏராளமான ரசிகர்கள் குவிந்து விடுவது வழக்கம்.



அந்த வகையில், காட்டாங்கொளத்தூர் பகுதியில் படப்பிடிப்பை முடித்து வீடு திரும்பியபோது தன்னை பின் தொடர்ந்த ரசிகர்களுக்கு கார் கண்ணாடியை இறக்கிவிட்டு பாதுகாப்பாக பத்திரமாக வீட்டிற்கு திரும்பி செல்லுங்கள் என்று அறிவுரை வழங்கியுள்ளார். இதே போன்று பரங்கிமலை பகுதியில் படப்பிடிப்பு நடந்த போது, மாணவ மாணவிகள் கூடிவிட்டனர். அப்போது ஏற்பட்ட தள்ளுமுள்ளுவில் அங்கிருந்த தடுப்பு வேலி சரிந்து விழுந்தது. அப்போது தனது ரசிகர்களுக்கு ஆபத்து நேர்ந்துவிடக்கூடாது என்று கருதி, ஓடிச் சென்று அந்த தடுப்பு வேலியை தாங்கி பிடித்துள்ளார்.

இந்த நிலையில், தற்போது காசிமேடு மீன்பிடி துறைமுகத்தில் தளபதி 63 படப்பிடிப்பு நடந்து வருகிறது. இதையடுத்து, அங்குள்ள விஜய் ரசிகர்கள் தளபதியை காண அங்கு திரண்டனர். மாலை 4 மணி முதல் பொறுமையாக காத்திருந்த அவர்களுக்கு வெறும் ஏமாற்றம் மிஞ்சியது. ஒரு கட்டத்தில் பொறுமை இழந்த அவர்கள் விஜய்யைப் பார்க்க ஆளாளுக்கு முண்டியடித்துள்ளனர். இதனால், அங்கு தள்ளுமுள்ளு ஏற்பட்டுள்ளது.

இதையடுத்து, கூட்டத்தை கலைக்க முயன்ற காசிமேடு மீன்பிடி துறைமுக போலீசாருக்கும் ரசிகர்களுக்கும் இடையில், கடும் வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. அப்போது, திடீரென்று போலீசார் விஜய் ரசிகர்கள் மீது தடியடி தாக்குதல் நடத்தியுள்ளனர். இதில் பலர் காயமடைந்துள்ளனர். இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்