ஆப்நகரம்

Vani Jairam: பிரபல பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம்: போலீசார் பரபரப்பு வழக்கு.!

பின்னணி பாடகி வாணி ஜெயராம் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை செய்து வருவது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Samayam Tamil 4 Feb 2023, 7:44 pm
இந்திய சினிமாவில் நீண்ட காலமாக பிரபல பாடகியாக வலம் வந்தவர் வாணி ஜெயராம். தமிழ் சினிமாவில் முதன் முறையாக தீர்க்க சுமங்கலி என்ற படத்தில் 'மல்லிகை என் மன்னன் மயங்கும்' என்ற பாடலின் மூலம் பாடகியாக அறிமுகமானார். தமிழ் மட்டுமின்றி தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, பெங்காலி, ஒடியா உள்ளிட்ட 19 மொழிகளில் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடியுள்ளார் வாணி ஜெயராம்.
Samayam Tamil Vani Jayaram
Vani Jayaram


ஏழு ஸ்வரங்களின் கான சரஸ்வதி என்று அழைக்கப்பட்டு வந்த வாணி ஜெயராம், சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருதை 3 முறை பெற்றுள்ளார். அண்மையில் ஒன்றிய அரசு இவருக்கு பத்மபூஷன் விருதை அறிவித்தது. இந்நிலையில் பாடகி வாணி ஜெயராம் இன்று திடீரென மரணமடைந்துள்ளார். அவரது மறைவு திரைத்துறையினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்

வாணி ஜெயராம் கணவர் இறப்பிற்கு பின்னர், நுங்கம்பாக்கத்தில் உள்ள தன்னுடைய வீட்டில் தனியாக வசித்து வந்துள்ளார். இவரது வீட்டில் பணிபுரியும் பெண், வழக்கம்போல் இன்று காலையில் வீட்டிற்கு வந்து பலமுறை கதவை தட்டியும் திறக்கவில்லை.

இதனையடுத்து அவர் பக்கத்து வீட்டார்களிடம் தகவலை கூறிய நிலையில், அவர்கள் வாணி ஜெயராமுக்கு போன் செய்துள்ளனர். அவர் போனை எடுக்காததால் வாணி ஜெயராமின் சகோதரருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. உடனே விரைந்து வந்த அவர் தன்னிடம் இருந்த மற்றொரு சாவியின் மூலம் கதவை திறந்து உள்ளே பார்த்தபோது தலையில் அடிபட்டு ரத்த காயங்களுடன் வாணி ஜெயராம் இறந்து கிடந்துள்ளார்.

Vijay: மருமகள் அனுமதி இல்லாமல் அது நடக்காது: அப்பா எஸ்.ஏ.சி. ஓபன் டாக்.!

இது குறித்து காவல் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து விரைந்து வந்த போலீசார் வாணி ஜெயராம் உடலை மீட்டுள்ளனர். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வாணி ஜெயராம் மரணம் இயற்கைக்கு மாறானதாக ஐபிஓ 174 பிரிவின்படி வழக்கு பதிவு செய்துள்ளனர் போலீசார்.

Maaveeran: திரைத்துறையில் சிவகார்த்திகேயன் செய்த சாதனை: கொண்டாடிய 'மாவீரன்' படக்குழு.!

பிரேத பரிசோதனை அறிக்கை வந்த பின் வாணி ஜெயராமன் மரணம் குறித்த அடுத்த கட்ட விசாரணையை துவங்கவுள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர். இதனால் தற்போது பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்