ஆப்நகரம்

கமலுக்கு மட்டும் நீதிமன்றம் விலக்கு, ஷங்கர் உள்ளிட்ட 16 பேருக்கு சம்மன்

இந்தியன் 2 விபத்து நடந்த இடத்தில் இன்று போலீசார் முன்னிலையில் நடந்ததை மீண்டும் நடித்து காட்ட ஷங்கர் உள்ளிட்டவர்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

Samayam Tamil 18 Mar 2020, 10:29 am
கமல் ஹாசன் - ஷங்கர் இருவரும் இணைந்துள்ள பிரம்மாண்ட படமான இந்தியன் 2 படத்தின் ஷூட்டிங் சென்ற வருடம் துவங்கி வேகமாக நடந்து வந்தது.
Samayam Tamil Kamal Haasan


பிப்ரவரி 19ம் தேதி இரவு சென்னையில் உள்ள இவிபி ஸ்டூடியோவில் ஷூட்டிங் நடந்து வந்தபோது ராட்சச கிரேன் சாய்ந்து விபத்து ஏற்பட்டது. அதில் மூன்று பேர் பலி ஆகினர். இந்த விபத்திற்கு பிறகு இந்தியன் 2 ஷூட்டிங் தற்போது வரை துவங்காமல் இருக்கிறது.

இந்நிலையில் இந்த விபத்து பற்றி விசாரணை நடத்தும் மத்திய குற்றப்பிரிவு போலீசார் ஷங்கர், கமல் உள்ளிட்டவர்களை நேரில் அழைத்து விசாரணை நடத்தினர்.

மேலும் இன்று விபத்து நடந்த இடத்தில் நடந்த விஷயங்களை அப்படியே நடித்து காட்டும்படி போலீசார் கேட்டுள்ளனர். அதற்காக கமல் நேற்று சென்னை உயர் நீதிமன்றத்தில் அவசர வழக்கு தொடர்ந்தார். போலீசார் தன்னை மீண்டும் மீண்டும் நடித்து காட்டும்படி துன்புறுத்துகின்றனர் என கூறியிருந்தார்.

வழக்கை விசாரித்த நீதிமன்றம் கமல் இன்று கமல் நடந்த இடத்திற்கு வர தேவையில்லை என விலக்கு அளித்தது.

இந்நிலையில் ஷங்கர் உள்ளிட்ட 16 பேரை விபத்து நடந்த இடத்தில் ஆஜராகும்படி மத்திய குற்றப்பிரிவு போலீசார் சம்மன் அனுப்பியுள்ளனர் என கூறப்படுகிறது.

அந்த கரேன் தாங்கக்கூடிய எடையை விட மூன்று மடங்கு எடை வைக்க அனுமதித்தது யார் என்பது பற்றி விசாரனை நடத்தப்படும் என்று தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்