ஆப்நகரம்

Pollachi Sexual Case: அந்த 4 பேர கொல்றதுக்கு 5 நிமிஷம் போதும்: கோபத்தில் கொந்தளித்த விஷால்!

பொள்ளாசியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை கொலை செய்வதற்கு வெறும் 5 நிமிஷம் போதும் என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.

Samayam Tamil 11 Mar 2019, 5:57 pm
பொள்ளாசியில் இளம்பெண் பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டுள்ள 4 பேரை கொலை செய்வதற்கு வெறும் 5 நிமிஷம் போதும் என்று விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் தனது ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்.
Samayam Tamil vishal


கோயம்புத்தூர் மாவட்டம் பொள்ளாச்சியில் ஃபேஸ்புக் மூலம் ஏற்பட்ட பழக்கத்தால் இளம் பெண்ணுக்கு நடந்த விபரீதம் தமிழகத்தில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி வருகிறது. இதுதொடர்பான வழக்கில் திருநாவுக்கரசு, சதீஷ், சபரிராஜன் மற்றும் வசந்தகுமார் ஆகிய 4 பேரை போலீசார் கைது செய்தனர்.

Also Read This: Pollachi: 20 பேர் கும்பல்., 1500 வீடியோக்கள்., பாதிக்கப்பட்ட 200 பெண்கள்- கொதிக்கும் பிரபலங்கள்


அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில், பல ஆண்டுகளாக இது போன்ற பல குற்றச்சமபவங்களை அரங்கேற்றி வந்தது தெரியவந்துள்ளது. மேலும் 200-க்கும் மேற்பட்ட பெண்கள் பாதிக்கப்பட்டுள்ளனர் என்றும், சுமார் 20 பேருடன் இந்த கும்பல் இயங்கி வந்ததாகவும் விசாரணையில் தெரியவந்தது.

இந்த நிலையில், பொள்ளாச்சி பாலியல் வன்கொடுமை வழக்கு தொடர்பாக நடிகர் விஷால் தனது டுவிட்டர் பக்கத்தில் கோபத்தில் கொந்தளித்துள்ளார். இது குறித்து அவர் கூறுகையில், இளம் பெண்களை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் கைது செய்யப்பட்ட அந்த 4 பேரை கொலை செய்வதற்கு வெறும் 5 நிமிஷம் மட்டுமே போதும். மேலும், அவர்களை தூக்கில் ஏற்ற வேண்டும். அப்போது தான் இது போன்ற வெறி பிடித்தவர்கள் இனிமேல் பெண்களை தொடுவதற்கு கூட பயப்படுவார்கள் என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.

சிறிது நேரத்திலேயே இந்தப் பதிவு உடனடியாக நீக்கப்பட்டுவிட்டது என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்