ஆப்நகரம்

மீண்டும் தொடங்குகிறது 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு

தமிழில் அடுத்து மிகப்பெரிய எதிர்பார்ப்பை தாங்கி நிற்கும் படமான 'பொன்னியின் செல்வன்' படப்பிடிப்பு மீண்டும் ஜனவரியில் தொடங்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 22 Dec 2020, 7:17 pm
மணிரத்னம் இயக்கத்தில் மிகப்பெரிய பட்ஜெட்டில் தொடங்கப்பட்ட 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, பிரபு, சரத்குமார் உள்ளிட்ட பல்வேறு முன்னணி நட்சத்திரங்கள் நடிக்கின்றனர்.
Samayam Tamil பொன்னியின் செல்வன்
பொன்னியின் செல்வன்


மெட்ராஸ் டாக்கீஸ் - லைகா நிறுவனம் இணைந்து இப்படத்தை தயாரிக்கின்றன. ரவிவர்மன் ஒளிப்பதிவு செய்கிறார். வழக்கமாக மணிரத்னம் படத்தில் பணியாற்றும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார்.

முதற்கட்ட படப்பிடிப்பின்போதே 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் மிகப்பெரிய எதிர்பார்ப்பை ஏற்படுத்தியது. மணிரத்னத்தின் கனவு திரைப்படம் என்பதாலும், தலைசிறந்த ஒரு வரலாற்று கதை என்பதாலும் இப்படத்தின் ஒவ்வொரு நகர்வும் ரசிகர்களால் உன்னிப்பாக கவனிக்கப்பட்டது. அதோடு மட்டுமல்லாமல் ஒரேபடத்தில் இத்தனை நட்சத்திர பட்டாளம் இணைவதும் அதற்கு முக்கிய காரணம் என சொல்லலாம்.

சர்ச்சை நடிகைக்கு கல்யாணமானது உண்மையே: கணவரே சொல்லிட்டார்

மும்முரமாக நடைபெற்ற இப்படத்தின் படப்பிடிப்பு கொரோனா ஊரடங்கால் இடையில் நின்றது. ஹைதராபாத் உள்ளிட்ட இடங்களில் படப்பிடிப்பு செய்து வந்தனர். இந்நிலையில், 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தின் படப்பிடிப்பு மீண்டும் வருகின்ற ஜனவரியில் தொடங்குவதாக உறுதி செய்யப்பட்டிருக்கிறது. அப்போது தொடங்கப்படும் படப்பிடிப்பை வெகு சீக்கிரமாக முடித்து இறுதிக்கட்ட பணிகளை தொடங்க படக்குழு தீர்மானித்திருக்கிறது.

ஜனவரியில் படப்பிடிப்பு தொடங்கி நிறைவடைந்தால், அடுத்தகட்டமாக அதன் ஃபர்ஸ்ட் லுக், டீஸர் போன்றவைகளை படக்குழு வெளியிட வாய்ப்பிருக்கிறது. மிகப்பெரிய இடைவெளிக்கு பிறகு படப்பிடிப்பு தகவல் வெளியாகியிருப்பதே இந்த பிரம்மாண்ட படத்தின் ஒரு முக்கிய அப்டேட் தான். மீண்டும் தொடங்கும் இந்த படப்பிடிப்பு ஹைதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் நடைபெறவுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்