ஆப்நகரம்

இந்தூருக்கு ரயிலில் பயணம் செய்த 'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர்: வைரலாகும் புகைப்படம்!

'பொன்னியின் செல்வன்' படக்குழுவினர் அடுத்தக்கட்ட படப்பிடிபிற்காக மகேஷ்வர் நகருக்குச் சென்றுள்ளனர்.

Samayam Tamil 30 Aug 2021, 12:43 pm
மணிரத்னம் இயக்கத்தில் பிரம்மாண்டமாக உருவாகி வரும் 'பொன்னியின் செல்வன்' படத்தை இந்திய சினிமாவே எதிர்பார்த்து காத்து கொண்டிருக்கிறது. எழுத்தாளர் கல்கி கிருஷ்ணமூர்த்தி எழுதிய புகழ்பெற்ற நாவலான 'பொன்னியின் செல்வன்' கதை அதே பெயரில் படமாக உருவாகி வருகிறது. இந்நிலையில் இந்த படத்தின் அடுத்தக்கட்ட படப்பிடிப்பிற்காக இந்தூர் விரைந்துள்ளனர் படக்குழுவினர்.
Samayam Tamil Ponniyin Selvan
Ponniyin Selvan


விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், ஐஸ்வர்ய லட்சுமி, த்ரிஷா, பிரபு, சரத்குமார், விக்ரம் பிரபு, கிஷோர், ஜெயராம், லால், ரகுமான் உள்ளிட்ட பல மொழிகளை சேர்ந்த பிரபல நட்சத்திரங்கள் நடிக்கும் 'பொன்னியன் செல்வன்' படம் தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் உருவாக்கப்பட்டு வருகிறது. இந்தப்படத்தை பிரம்மாண்டமாக இரண்டு பாகங்களாக உருவாக்குகிறார் இயக்குனர் மணிரத்னம்.

மெட்ராஸ் டாக்கிஸ் நிறுவனமும், லைக்கா நிறுவனமும் இணைந்து தயாரிக்கும் இந்த படத்திற்கு இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்கிறார். இந்தப்படத்தின் இறுதிக்கட்டப் படப்பிடிப்பு மத்தியப் பிரதேச மாநிலத்தில் உள்ள குவாலியர் கோட்டையில் நடைபெற்று வந்தது. இந்நிலையில் தற்போது அடுத்தக்கட்ட படப்பிடிபிற்காக மகேஷ்வர் நகருக்குச் சென்றுள்ளது படக்குழு.

சர்வதேச விருது வென்ற ஆர்யா பட நடிகை: குவியும் வாழ்த்துக்கள்!
குவாலியர் நகரிலிருந்து இந்தூருக்கு நேரடியாக விமானங்கள் இல்லாததால் ஒட்டுமொத்தப் படக்குழுவினரும் ரயிலில் பயணம் செய்துள்ளனர். இது தொடர்பான புகைப்படங்களை நடிகர் ரகுமான் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இந்த புகைப்படங்கள் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

அந்த புகைப்படத்துடன் ''குவாலியரிலிருந்து இந்தூருக்கு ரயிலில் செல்கிறோம். நான் ரயிலில் பயணித்து 20 ஆண்டுகள் ஆகிவிட்டன. இது பழைய நினைவுகளைத் தூண்டுகிறது. மணிரத்னம், ரவிவர்மனுடன் என்னுடைய வேடிக்கையான குட்டிக் கதைகளைப் பகிர்ந்து கொண்டேன். நாங்கள் போக வேண்டிய இடம் மகேஷ்வர். 2 மணி நேரம் சாலை வழியாகப் பயணிக்க வேண்டும்'' என்று குறிப்பிட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்