ஆப்நகரம்

Mani Ratnam : பொன்னியின் செல்வன் ஷூட்டிங் இங்கதான் நடக்குதாம்?

பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு எங்கு நடைபெறவுள்ளது எனும் தகவல் வெளியாகியுள்ளது.

Samayam Tamil 4 Feb 2020, 6:10 pm
தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம் ஆகிய மொழிகளில் உருவாகி வரும் பொன்னியின் செல்வன் படத்தின் அடுத்தக் கட்ட படப்பிடிப்பு பற்றிய தகவல்கள் வெளியாகியுள்ளன. இரண்டாம் கட்ட படப்பிடிப்பை எதிர்நோக்கியுள்ள பொன்னியின் செல்வன் படக்குழு பாண்டிச்சேரிக்கு பயணிக்கவுள்ளனர்.
Samayam Tamil ponniyin selvan


விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, அமிதாப்பச்சன், ஐஸ்வர்யாராய், பிரபு, நிழல்கள் ரவி, ரகுமான், விக்ரம் பிரபு, ஜெயராம், லால், ஐஸ்வர்யா லட்சுமி ஆகியோருடன் இயக்குனர் மணி ரத்னம், இசையமைப்பாளர் ஏ ஆர் ரஹ்மான் உள்ளிட்ட பெரும் படை இணையும் ஒரு பிரம்மாண்ட தயாரிப்பான பொன்னியின் செல்வன் படம் இரண்டு பாகங்களாக உருவாகவுள்ளது.

இந்நிலையில், முதல் பாகத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே தாய்லாந்தில் நடைபெற்று முடிந்தது. அங்கு படப்பிடிப்பை முடித்துக் கொண்டு இந்தியா திரும்பியுள்ளனர் மணிரத்னம் அன் கோ. இந்நிலையில் இரண்டாம் கட்டப் படப்பிடிப்பு குறித்த தகவல்கள் வெளியானது. அதில் பொன்னியின் செல்வன் படத்தின் ஷூட்டிங் பாண்டிச்சேரியில் நடைபெறவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இயக்குநர் மணிரத்னம் பாண்டிச்சேரியில் இருக்கும் கடற்கரை பகுதியில் மொத்தம் 6 நாட்கள் இப்படத்தின் ஷூட்டிங்கை நடத்த திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்