மணிரத்னத்தின் கனவுப் படமான பொன்னியின் செல்வனில் குந்தவையாக நடித்து ரசிகர்களை கவர்ந்துவிட்டார் த்ரிஷா. அவரின் அழகையும், நடிப்பையும் பற்றி தான் அனைவரும் பேசிக் கொண்டிருக்கிறார்கள். இந்நிலையில் குந்தவை சோழ நாட்டு பெண்ணே இல்லை. அவர் பாண்டிய நாட்டு பெண். அதற்கு ஆதாரம் அவர் உடம்பில் இருக்கும் மீன் டாட்டூ தான் என்று கிளப்பிவிட்டுள்ளனர். இதை பார்த்தால் த்ரிஷாவும், மணிரத்னமுமே குபீரென்று சிரித்துவிடுவார்கள்.
அண்மைச் செய்திகளை உடனடியாக படிக்க கூகுள் நியூஸில் தமிழ் சமயம் இணையதளத்தை பின் தொடரவும்
இது மட்டும் அல்ல பொன்னி நதி பாடலின் வடிவேலு வெர்ஷன் வேறு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வழக்கம் போன்று இந்த வடிவேலு வெர்ஷனும் செம காமெடியாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் ரிலீஸான ஐந்தே நாட்களில் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸான வேகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.
Ponniyin Selvan: எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்த பொன்னியின் செல்வன்
மேலும் இங்கிலாந்தில் 1 மில்லியன் பவுண்டு வசூல் செய்த முதல் தமிழ் படம் என்கிற பெருமையயைும் பெற்றிருக்கிறது பொன்னியின் செல்வன். உலக அளவில் ரூ. 300 கோடி வசூலித்திருக்கிறது.
அந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் 8 மாதங்களில் ரிலீஸாகும் என்று வந்தியத்தேவன் கார்த்தி தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை பார்த்து அதிருப்தி அடைந்தவர்களோ, இப்பவே கண்ணை கெட்டுதே, இதில் இரண்டாம் பாகம் வேறா என தெரிவித்துள்ளனர்.
இது மட்டும் அல்ல பொன்னி நதி பாடலின் வடிவேலு வெர்ஷன் வேறு வெளியாகி ரசிகர்களை கவர்ந்துள்ளது. வழக்கம் போன்று இந்த வடிவேலு வெர்ஷனும் செம காமெடியாக இருக்கிறது.
பொன்னியின் செல்வன் ரிலீஸான ஐந்தே நாட்களில் தமிழகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்துள்ளது. படம் ரிலீஸான வேகத்தில் ரூ. 100 கோடி வசூல் செய்த முதல் படம் என்கிற பெருமையை பெற்றுள்ளது.
Ponniyin Selvan: எந்த தமிழ் படமும் செய்யாத சாதனையை செய்த பொன்னியின் செல்வன்
மேலும் இங்கிலாந்தில் 1 மில்லியன் பவுண்டு வசூல் செய்த முதல் தமிழ் படம் என்கிற பெருமையயைும் பெற்றிருக்கிறது பொன்னியின் செல்வன். உலக அளவில் ரூ. 300 கோடி வசூலித்திருக்கிறது.
அந்த படத்தின் இரண்டாம் பாகம் இன்னும் 8 மாதங்களில் ரிலீஸாகும் என்று வந்தியத்தேவன் கார்த்தி தெரிவித்துள்ளார். முதல் பாகத்தை பார்த்து அதிருப்தி அடைந்தவர்களோ, இப்பவே கண்ணை கெட்டுதே, இதில் இரண்டாம் பாகம் வேறா என தெரிவித்துள்ளனர்.