ஆப்நகரம்

டிபி நோயால் பாதிக்கப்பட்ட நடிகையை மருத்துவமனையிலே விட்டுச் சென்ற கணவர்!

டிபி நோயினால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை பூஜா தட்வாலை, கணவரும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனையிலேயே பரிதாபமாக விட்டுச் சென்றுள்ளனர்.

Samayam Tamil 20 Mar 2018, 4:07 pm
டிபி நோயினால் பாதிக்கப்பட்ட பிரபல நடிகை பூஜா தட்வாலை, கணவரும் அவரது குடும்பத்தினரும் மருத்துவமனையிலேயே பரிதாபமாக விட்டுச் சென்றுள்ளனர்.
Samayam Tamil பிரபல நாயகி பூஜா தட்வால்
பிரபல நாயகி பூஜா தட்வால்


பிரபல நாயகி பூஜா தட்வால் டிபி நோயினால் பாதிக்கப்பட்டுள்ளார். தற்போது இவர் சாப்பிட கூட வசதியில்லாமல் இருக்கிறார். இவர் ‘வீர்காடி’, ‘ஹிந்துஸ்தான்’, ‘சிந்தூர் கி சவுகந்த்’ உட்பட பல இந்தி படங்களில் நடித்துள்ளார். திருமணத்திற்கு பின் கோவாவில் வசித்து வந்தார். அங்கிருக்கும்போது அவர் டிபி நோயால் பாதிக்கப்பட்டார். தற்போது அவரை மும்பையில் உள்ள செவ்ரி டிபி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு நோய் முற்றியுள்ளதை கண்டறிந்த பூஜாவின் கணவர் மற்றும் குடும்பத்தினர் நடிகையை மருத்துவமனையிலேயே விட்டுவிட்டு சென்றுவிட்டனர்.

இதனை சற்றும் எதிர்ப்பார்க்காத பூஜா சாப்பிடக்கூட வழியில்லாமல் பரிதவித்து வருகிறார். மருத்துவமனையில் உள்ள சிலர் தற்போது அவருக்கு உதவிகள் செய்து வருகின்றனர். நோய்யில் பரிதவித்து வரும் பூஜா தனக்கு உதவி செய்யுமாறு நடிகர் சல்மான் கானிடம் ஒரு வீடியோ மூலம் உதவி கேட்டுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்