ஆப்நகரம்

‘கொலையுதிர் காலம்’ படம் மூலம் தமிழில் என்ட்ரியாகும் இந்தி பட நிறுவனம்

நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘கொலையுதிர் காலம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியாகும் இந்தி பட நிறுவனமான. பூஜா என்டர்டைன்மென்ட் அன்ட் பிலிம் நிறுவனம்.

TNN 1 Apr 2017, 5:26 pm
நயன்தாரா நடிப்பில் உருவாகும் ‘கொலையுதிர் காலம்’ படம் மூலம் தமிழ் சினிமாவில் என்ட்ரியாகும் இந்தி பட நிறுவனமான. பூஜா என்டர்டைன்மென்ட் அன்ட் பிலிம் நிறுவனம்.
Samayam Tamil pooja entertinment and film produce a kolaiyuthir kaalam
‘கொலையுதிர் காலம்’ படம் மூலம் தமிழில் என்ட்ரியாகும் இந்தி பட நிறுவனம்


தமிழில் ‘பில்லா-2’, ‘உன்னைப்போல் ஒருவன்’ படங்களை இயக்கியவர் சக்ரி டோல்டி. இவர் தற்போது நயன்தாரா நடிப்பில் ‘கொலையுதிர்காலம்’ என்ற படத்தை இயக்கி வருகிறார். இதன் இந்தி பதிப்பில் நடிகை தமன்னா, நயன்தாரா கேரக்டரில் நாயகியாக நடிக்கிறார்.

இப்படம் மூலம் தென்னிந்தியாவில் காலடி எடுத்து வைக்கிறது பூஜா என்டர்டைன்மென்ட் அன்ட் பிலிம் லிமிடெட் நிறுவனம். 23 ஆண்டுகளாக திரைப்பட தயாரிப்புத்துறையில் பல படங்களை தயாரித்துள்ளது. இந்நிறுவனம் இந்தி, மராத்தி, பஞ்சாபி ஆகிய மொழிகளில் இதுவரை 31 படங்கள் தயாரித்துள்ளது.

அந்தவகையில், அமிதாப்பச்சன், ஷாருக்கான், சல்மான்கான் உள்பட பாலிவுட்டின் முன்னணி நடிகர்களை வைத்து படங்கள் தயாரித்துள்ள இந்நிறுவனம், முதன்முறையாக நயன்தாரா நடிக்கும் ‘கொலையுதிர்காலம்’ படம் மூலம் தென்னிந்திய சினிமாவிற்குள் என்ட்ரி கொடுத்துள்ளது. அந்த வகையில், தமிழில் ‘கொலையுதிர்காலம்’ படத்தை தயாரிக்கும் இந்நிறுவனம், இதையடுத்து தமிழ், மலையாளத்திலும் தொடர்ந்து படங்கள் தயாரிக்க திட்டமிட்டுள்ளது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்