ஆப்நகரம்

அருவா படத்தில் நான் ஹீரோயினா? பூஜா ஹெக்டே விளக்கம்

சூர்யா ஜோடியாக அருவா படத்தில் பூஜா ஹெக்டே நடிக்கிறார் என செய்தி பரவிய நிலையில் அவர் அதை மறுத்துள்ளார்.

Samayam Tamil 31 Mar 2020, 10:30 pm
நடிகர் சூர்யா அடுத்து ஹரி இயக்கத்தில் அருவா படத்தில் நடிக்கவுள்ளார். ஆறு, வேல், சிங்கம், சிங்கம் 2 மற்றும் சி3 ஆகிய படங்களுக்கு பிறகு இணைவது இது ஆறாவது முறை. அருவா படப்பெயர் ஏற்கனவே ஒரு படத்திற்கு வைக்கப்பட்டிருப்பதாக சர்ச்சை கிளம்பிய நிலையில் அது மாற்றப்படுமா என்பது பற்றி தயாரிப்பாளர் தற்போது வரை எந்த அறிவிப்பும் வெளியிடவில்லை.
Samayam Tamil Pooja Hegde


இந்த படத்தின் ஷூட்டிங் ஏப்ரல் மாதம் துவங்கும் என அறிவிக்கப்பட்டது. ஆனால் தற்போது கொரோனா காரணமாக ஊரடங்கு அமலில் இருப்பதால் ஷூட்டிங் தாமதமாக தான் துவங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த படத்தில் நடிகர் பூஜா ஹெக்டே தான் ஹீரோயினாக நடிக்கிறார் என செய்தி நேற்று பரவியது. இயக்குனர் அவருக்கு கதை கூறியிருப்பதாகவும் தேதிகள் முடிவானபிறகு அவர் ஒப்பந்தத்தில் கையெழுத்திடுவார் என கூறப்பட்டது.

இந்த செய்திக்கு தற்போது அவர் மறுப்பு தெரிவித்துள்ளார். தான் எந்த தமிழ் படத்திலும் நடிக்க ஒப்புக்கொள்ளவில்லை என தெரிவித்துள்ளார் அவர்.

அவர் பதிவிட்டுள்ள ட்விட்டில் கூறியிருப்பதாவது..

"ஹலோ ஹலோ.. நான் தமிழ் படத்தில் நடிக்கிறேன் என நீங்களே முடிவெடுத்துவிடாதீர்கள். தற்போது வரை நான் எந்த படத்திலும்கையெழுத்திடவில்லை. இரண்டு கதைகளை கேட்பதற்கு ஒப்புதல் அளித்துள்ளேன். நான் தமிழ் படங்களில் நடிக்கவே விரும்புகிறேன். எல்லாம் சரியாக அமைந்தால்..ஒப்புக்கொள்வேன்" என பூஜா ஹெக்டே கூறியுள்ளார். இதன் மூலம் அவர் வதந்திக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளார்.


சூர்யா இந்த படத்தில் அண்ணன்-தம்பி என இரண்டு வேடங்களில் நடிக்கவில்ளது குறிப்பிடத்தக்கது. அதனால் அருவா படத்தில் இரண்டு ஹீரோயின்கள் இருப்பார்கள் என தெரிகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்