ஆப்நகரம்

தன்னை தனியாக அழைத்த தயாரிப்பாளர்: நடிகை பூனம் கவுர்!

அலுவலகத்திற்கு தனியாக வரச்சொன்ன தயாரிப்பாளர், நான் அம்மாவுடன் சென்றதும் எங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டார்.

Samayam Tamil 24 Jul 2018, 4:45 pm
அலுவலகத்திற்கு தனியாக வரச்சொன்ன தயாரிப்பாளர், நான் அம்மாவுடன் சென்றதும் எங்களைப் பார்த்ததும் அதிர்ச்சியடைந்துவிட்டார்.
Samayam Tamil தன்னை தனியாக அழைத்த தயாரிப்பாளர்: நடிகை பூனம் கவுர்!


சமிபத்தில் தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி பல சினிமா நட்சத்திரங்கள் மீது பாலியல் புகார் கூறி ஒரு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளார். இந்நிலையில் அவரின் துணிச்சலைப் பார்த்து பல்வேறு நடிகைகள் தங்களின் வாழ்க்கையில் நடந்த பாலியல் சம்பவங்கள் பற்றி புகார் பற்றி பேசதுவங்கியுள்ளனர். ‘நெஞ்சிருக்கும் வரை’ படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை பூனம் கவுர். இவர் சமீபத்தில் தனக்கு நடந்த ஒரு சம்பவம் பற்றி கூறியுள்ளார்.

“பிரபல தயாரிப்பாளர் ஒருவர் என்னுடைய வீட்டிற்கு வந்து எனக்கு வாய்ப்பு தருவதாக கூறினார். பின்னர் தன்னை முதலில் அலுலகத்தில் வந்து பார்க்கச் சொன்னார். நானும் சென்றேன். நான் மட்டுமல்ல என்னுடைய அம்மாவையும் அழைத்துக் கொண்டு அவரது அலுவலகத்திற்குச் சென்றேன்.

அவர் நான் அம்மாவுடன் வருவதை எதிர்பார்க்கவில்லை, அதனால் என்னிடம் சரியாக பேசவில்லை. இதுவரையில் அவர் போன்கூட பேசவில்லை. மேலும் படத்தில் நடிக்க அவரிடம் இருந்து எந்த அழைப்பும் வரவில்லை’’ என்றார் நடிகை பூனம் கவுர். அந்த தயாரிப்பாளர் யார் என்ற விவரத்தை நடிகை பூனம் தெரிவிக்கவில்லை.

அடுத்த செய்தி

டிரெண்டிங்