ஆப்நகரம்

படத்தின் முழு சம்பளத்தையும், கேரள மக்களுக்கு வழங்கிய பிரபல கவர்ச்சி நடிகை!

பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, தனது ஒரு படத்தின் சம்பளம் முழுவதையும் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக வழங்கியுள்ளார்.

Samayam Tamil 21 Aug 2018, 6:00 pm
பிரபல கவர்ச்சி நடிகை பூனம் பாண்டே, தனது ஒரு படத்தின் சம்பளம் முழுவதையும் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்காக வழங்கியுள்ளார்.
Samayam Tamil Pandey-Poonam1


கேரளா மாநிலம் முழுவதும் தற்போது வெள்ளத்தால் சூழ்ந்து கடல் போல் காட்சியளிக்கின்றன. கனமழையினால் பாதிக்கபட்ட கேரள மாநில மக்கள் பலரும் தங்களது வீடுகளை இழந்து உடைகளை இழந்து தவிக்கின்றனர். மேலும் அவர்கள் தங்குவதற்கும் சாப்பிடுவதற்கும் சிரமப்பட்டு வருகின்றனர். இந்நிலையில் சினிமா பிரபலங்கள் மற்றும் அரசியல் கட்சித் தலைவர்கள் மற்றும் பொதுமக்கள் அனைவரும் தங்களால் இயன்ற உதவிகளை செய்து வருகின்றனர்.

இந்நிலையில், தன் கவர்ச்சியான நடிப்பால் பல ரசிகர்களை கொண்டுள்ள நடிகை பூனம் பாண்டே, வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட கேரள மக்களுக்கு நிவாரண நிதியாக தன ஒரு பட சம்பளத்தையே கொடுத்துள்ளார். இவர் தெலுங்கில் நடித்து வரும் ‘லேடி கபார் சிங்’ படத்திற்காக தனக்கு கொடுக்கப்பட்ட முழு சம்பளத்தையும் கேரளாவில் பாதிக்கப்பட்ட மக்களுக்காக நிவாரண நிதியாக கொடுத்து திரையுலகை ஆச்சர்யபடுதியுள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்