ஆப்நகரம்

வச்சு செஞ்ச நெட்டிசன்ஸ்: விளக்கு போட்டோவை வெளியிடாத ஜீவா

சமூக வலைதளவாசிகள் கண்டமேனிக்கு கிண்டல் செய்ததை அடுத்து நடிகர் ஜீவா தன் வீட்டில் விளக்கேற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை.

Samayam Tamil 6 Apr 2020, 3:06 pm
கொரோனா இருளை அகற்ற நாட்டு மக்கள் அனைவரும் ஏப்ரல் மாதம் 5ம் தேதி இரவு 9 மணி முதல் 9 நிமிடங்களுக்கு விளக்கு ஏற்றுமாறு அல்லது டார்ச்லைட் அடிக்குமாறு பிரதமர் நரேந்திர மோடி கேட்டுக் கொண்டார். அதன்படி திரையுலக பிரபலங்கள், பொது மக்கள் என்று ஏராளமானோர் நேற்று இரவு 9 மணிக்கு விளக்கேற்றினார்கள்.
Samayam Tamil jiiva


விளக்கேற்றிய திரையுலக பிரபலங்கள் அதை புகைப்படம் அல்லது வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டுள்ளனர். ஆனால் நடிகர் ஜீவா மட்டும் விளக்கேற்றிய புகைப்படங்களை வெளியிடவில்லை. முன்னதாக அவர் மோடியின் கோரிக்கையை ஏற்று அனைவரும் விளக்கேற்ற வேண்டும் என்று கூறி ட்விட்டரில் வீடியோ ஒன்றை வெளியிட்டார்.

அந்த வீடியோவை பார்த்தவர்கள் ஜீவாவை சங்கி என்று விமர்சித்தனர். மேலும் ஜிப்ஸி படத்தில் நடித்த ஜீவாவா இது, அந்த படத்தை பார்த்து உங்களை புத்திசாலி, நல்லவர் என்று தப்புக் கணக்கு போட்டுவிட்டோம் என்று சினிமா ரசிகர்கள் தெரிவித்தனர்.

நேற்று சினிமா ரசிகர்களும், சமூக வலைதளவாசிகளும் ஜீவாவை கண்டமேனிக்கு விளாசினார்கள். இதையடுத்து தான் அவர் தன் வீட்டில் விளக்கேற்றிய புகைப்படங்களை சமூக வலைதளங்களில் போஸ்ட் செய்யவில்லை போன்று.

இந்நிலையில் ரஜினி தன் வீட்டு வாசலில் கையில் மெழுகுவர்த்தியுடன் நின்ற புகைப்படத்தை பார்த்தவர்கள் அவர் காலில் சிவப்பு, கருப்பு நிற செருப்பு இருப்பதை கவனித்துவிட்டு விமர்சித்துக் கொண்டிருக்கிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

விளக்கேற்றியபோது ரஜினி அணிந்திருந்த செருப்பின் நிறத்தை கவனித்தீர்களா?

அடுத்த செய்தி

டிரெண்டிங்