ஆப்நகரம்

ஓடிடியில் ரிலீஸான கையோடு வர்மாவை கசிய விட்ட தமிழ் ராக்கர்ஸ்: பாலா பாவம்யா

வர்மா படம் ஓடிடியில் வெளியான வேகத்தை அதை கசியவிட்டுள்ளது தமிழ் ராக்கர்ஸ்.

Samayam Tamil 6 Oct 2020, 11:08 am
அர்ஜுன் ரெட்டி படத்தை தமிழில் த்ருவ் விக்ரமை வைத்து பாலா வர்மா என்கிற பெயரில் ரீமேக் செய்தார். மொத்த படத்தையும் எடுத்து முடித்த பிறகு அது திருப்தியாக இல்லாததால் கைவிடப்படுகிறது என்று தயாரிப்பு தரப்பு அறிவித்தது.
Samayam Tamil varmaa


அந்த அறிவிப்பை பார்த்தவர்கள் இது என்னய்யா விக்ரம் மகனின் முதல் படமே இப்படி பிரச்சனையாகியுள்ளது என்று நொந்து கொண்டார்கள். இந்நிலையில் த்ருவ் விக்ரமை வைத்து கிரிசாயா அர்ஜுன் ரெட்டியை ஆதித்ய வர்மா என்கிற பெயரில் ரீமேக் செய்து வெளியிட்டார். அந்த படத்திற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது.

வர்மா விமர்சனம்

இந்நிலையில் பாலா இயக்கிய வர்மா படம் இன்று ஓடிடியில் வெளியாகியுள்ளது. வர்மா படத்தை பார்த்தவர்கள் இது அர்ஜுன் ரெட்டி ரீமேக் என்றால் விஜய் தேவரகொண்டாவே நம்ப மாட்டாரே என விமர்சித்துள்ளனர்.

சொந்த கதையை மாஸாக படமாக எடுத்து வெளியிடுவதற்கு பெயர் போன பாலாவை பாவம் ரீமேக் செய்யச் சொல்லி சொதப்ப வைத்துவிட்டார்கள். பாலா மீது குற்றம் சொல்லி பலனில்லை. சச்சின் டெண்டுல்கரை போய் எஸ்.பி. பாலசுப்பிரமணியம் மாதிரி பாட வேண்டும் என்று சொல்லியது போன்று இருக்கிறது பாலாவை ரீமேக் செய்யச் சொல்லியது. அதனால் தான் வர்மாவை பார்க்க கஷ்டமாக இருக்கிறது என்று படம் பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.

எந்த படம் ரிலீஸானாலும் அதை அவசர, அவசரமாக இணையதளத்தில் வெளியிடும் தமிழ் ராக்கர்ஸ் வர்மாவையும் விட்டு வைக்கவில்லை. வர்மமா ரிலீஸான வேகத்தில் தமிழ் ராக்கர்ஸில் அது கசிந்துவிட்டது. புதுப் படம் வெளியாகும் போது எல்லாம் இந்த தமிழ் ராக்கர்ஸை அடக்க ஒரு ஹீரோ வர மாட்டாரா என்று கேள்வி எழும். அதன் பிறகு அதை யாரும் கண்டுகொள்வது இல்லை.

ஆதித்ய வர்மா ரிலீஸான போது வர்மாவை பார்க்க ஆவலாக இருப்பதாக பலரும் தெரிவித்தனர். இந்நிலையில் வர்மா படத்தை இன்று பார்த்தவர்களோ, இது வெளியாகாமலேயே இருந்திருக்கலாம் போன்று என்று கூறியுள்ளனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்