ஆப்நகரம்

பட விழா மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை

சிவகார்த்திக்கேயனை அடுத்து பிரபல நடிகை ஒருவர் படவிழாவில் கண்ணீர் விட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.

TNN 16 Oct 2016, 11:35 am
சிவகார்த்திக்கேயனை அடுத்து பிரபல நடிகை ஒருவர் படவிழாவில் கண்ணீர் விட்ட சம்பவம் அனைவரையும் நெகிழ்ச்சி அடைய வைத்தது.
Samayam Tamil poorna actress crying in the cinema
பட விழா மேடையில் கண்ணீர் விட்ட பிரபல நடிகை


இயக்குநர் மிஷ்கின் தயாரித்து நடிக்கும் படம் சவரக்கத்தி .இந்த படத்தை ஏ.ஜி. ஆதித்தயா இயக்குகிறார். இயக்குநர் ராம் , நடிகை பூர்ணா இந்த படத்தில் நடித்துள்ளனர்.இந்த படத்ட்கிற்கான டீசர் வெளியிடும் நிகழ்ச்சி நேற்று நடைப்பெற்றது.
இந்த விழாவில் பேசிய நடிகை பூர்ணார் : நான் முதல் படத்தில் நடித்தபோது எனக்கு அங்கீகாரம் கிடைத்தது. அதைத் தொடர்ந்து படங்கள் கிடைக்கும் என்று எண்ணியிருந்தேன். அப்போது சினிமாவில் நடிப்பதற்கு திறமை மட்டும் இருந்தால் போதாது, அதிர்ஷ்டமும் வேண்டும் என்பது புரிந்தது. படங்கள் கிடைக்காததால் சினிமாவே வேண்டாம் என்று ஒதுங்க நினைத்த நேரத்தில், தெலுங்கில் நான் நடித்த படம் பெரிய ஹிட்டானது.

அதைத் தொடர்ந்து தற்போது மிஷ்கின் படத்தில் வாய்ப்பு கிடைத்தது பெரிய அதிர்ஷ்டம் என்று கூறுவதை எனக்கு கிடைத்த வரமாகவே கருதுகிறேன் என்று மேடையிலேயே கண்கலங்கினார். இந்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடைய வைத்தது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்