ஆப்நகரம்

தங்கம் கடத்தும் கும்பல், நடிகைகளின் போன் நம்பர்களை கேட்டனர்: பிரபல நடிகர் அதிர்ச்சி பேட்டி

நடிகை பூர்ணாவிடம் பணம் பறிக்க முயன்ற கும்பல் பற்றி நடக்கும் விசாரணையில் பல அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி வருகின்றனர்.

Samayam Tamil 1 Jul 2020, 2:19 pm
தமிழ் மற்றும் மலையாள சினிமாவில் பல்வேறு படங்களில் நடித்துள்ளவர் பூர்ணா என அழைக்கப்படும் ஷம்னா காசிம். அவர் சமீபத்தில் ஒரு கும்பல் பணம் கேட்டு மிரட்டுவதாக போலீசில் புகார் அளித்திருந்தார்.
Samayam Tamil Poorna and Dharmajan


துபாயில் நகைக்கடை நடத்தி வருவதாக கூறி ஒரு நபர் அறிமுகமாகி உள்ளார். அவரது உறவினர்கள் எனக்கு கூறிக் கொண்டு பூர்ணாவின் வீட்டுக்கு ஒரு கும்பல் சென்றுள்ளது. ஒரு டிக்டாக் பிரபலத்தின் புகைப்படத்தை காட்டி அவர் தான் மாப்பிள்ளை எனக் கூறியுள்ளனர்.

அதற்குப் பிறகு அவர்கள் பணம் கேட்டதால் சந்தேகம் அடைந்த பூர்ணாவின் பெற்றோர் போலீசில் புகார் அளித்தனர். திருமண ப்ரோபோசல் உடன் அறிமுகமான அவர்கள், தொழில் விஷயமாக உடனே படம் தேவைப்படுகிறது என கூறி கேட்டுள்ளனர். மேலும் அந்த நபர்கள் பூர்ணாவின் வீடு மற்றும் கார் ஆகியவற்றை புகைப்படம் எடுத்ததும் சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளது. அதனால் போலீசில் புகார் அளித்துள்ளனர்.

இந்த புகாரை விசாரித்த போலீஸ் நான்கு பேரைக் கைது செய்தது. கைதான நபர்களில் ஒருவர் ஹேர் ஸ்டைலிஸ்ட் ஹாரிஸ் என்பவர். அவர் பிரபல மலையாள காமெடி நடிகர் தர்மஜன் என்பவருக்கு நெருக்கமாக இருப்பது போன் கால்கள் அடிப்படையில் கண்டறியப்பட்டது. அது தொடர்பாக விளக்கமளிக்க நேரில் ஆஜராகும்படி போலீசார் தர்மஜனுக்கு சம்மன் அனுப்பினர். அவர் அதற்காக கொச்சி போலீஸ் கமிஷனர் அலுவலகத்திற்கு வந்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் பல அதிர்ச்சிகர தகவல்களை தெரிவித்துள்ளார்.

"எனக்கு சில மாதங்களுக்கு முன்பு சில கால்கள் வந்தது. அவர்கள் தாங்கள் தங்கம் கடத்தலில் ஈடுபடுவதாக கூறினார்கள். அவர்களுக்கு நடிகை பூர்ணா மற்றும் மியா ஜார்ஜ் ஆகியோரது போன் நம்பர்களை கொடுக்க முடியுமா என கேட்டார்கள். அவர்கள் பல கோடி ரூபாய் புரளும் மிகப் பெரிய பிசினஸ் செய்து வருவதாகவும் தெரிவித்தார்கள்" என என தர்மஜன் பேட்டி அளித்துள்ளார். நடிகைகளை குறிவைத்து ஒரு கும்பல் இப்படி திட்டமிட்டு செயல்பட்டுள்ளது தர்மஜன் அளித்துள்ள பேட்டி மூலமாக உறுதியாகியுள்ளது.

அந்த கும்பல் உடன் தொடர்பில் இருந்த பல்வேறு சினிமா துறை நடிகர்கள் மற்றும் பிரபலங்களுக்கு சம்மன் அனுப்பப்பட்டு விசாரணை நடத்தப்படும் என பூர்ணா வழக்கை விசாரித்து வரும் சிறப்பு புலனாய்வு குழு தெரிவித்துள்ளது.

இந்நிலையில் இந்த மோசடியில் ஈடுபடும் கும்பல் உடன் தன்னை தொடர்பு படுத்தி செயதி வெளியிட வேண்டாமென பூர்ணா நேற்று ஒரு அறிக்கையில் கேட்டுக் கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

"போலியான பெயர்கள், விலாசம் ஆகியவற்றை கூறி ஒரு திருமணப் ப்ரோபோசல் உடன் எங்களை அணுகி சில நபர்கள் ஏமாற்றியதால் நான் போலீசில் புகார் அளிக்க எங்கள் குடும்பம் முடிவு செய்தது. இதனால் எங்களை மிரட்ட துவங்கினர். அதனால் தான் சட்டப்படி நடவடிக்கை எடுக்க போலீசை அணுகினோம். அவர்கள் உண்மையான நோக்கம் என்னவென்பது எங்களுக்கு தெரியாது, தற்போதும் தெரியவில்லை.”

"தற்போது கேரள போலீஸ் சிறப்பான பணியை செய்து குற்றவாளிகள் அனைவரையும் கைது செய்து விட்டது. அதனால் இந்த வழக்கு விசாரணை முடியும் வரை மீடியா நண்பர்கள் என்னைப் பற்றியும் என் குடும்பத்தைப் பற்றியும் ப்ரைவசியை கவனத்தில் கொள்ளும்படி கேட்டுக்கொள்கிறேன். எனக்கு நீதித்துறையின் மீது அதிக நம்பிக்கை உள்ளது."

"இந்த கேஸ் முடிவு பெற்ற பிறகு நான் நிச்சயம் மீடியாவை சந்திப்பேன். எனக்கு இந்த மிக மோசமான நேரத்தில் ஆதரவு அளித்துவரும் என் நெருங்கிய நண்பர்கள் மற்றும் நல விரும்பிகளுக்கும் மீண்டும் நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன்" என பூர்ணா தெரிவித்துள்ளார்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்