ஆப்நகரம்

சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை

பிரபல டி.வி., சீரியல் நடிகரான சாய் பிரசாந்த், விஷம் அருந்தி, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.

TNN 14 Mar 2016, 10:13 am
பிரபல டி.வி., சீரியல் நடிகரான சாய் பிரசாந்த், விஷம் அருந்தி, தற்கொலை செய்துகொண்டுள்ளார்.
Samayam Tamil popular tv star and actor sai prashanth commits suicide
சின்னத்திரை நடிகர் சாய் பிரசாந்த் தற்கொலை


சென்னை வளசரவாக்கம் கங்கா நகரில் உள்ள தனது வீட்டில், இறந்து கிடந்த அவரது சடலத்தை போலீசார் மீட்டு, பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். சாய் பிரசாந்த், குளிர்பானத்தில் விஷம் கலந்து, அருந்தியுள்ளார்.

அண்ணாமலை,செல்வி,அரசி உள்பட ஏராளமான டி.வி.,சீரியல்களிலும், சினிமா படங்களிலும் நடித்துள்ள சாய் பிரசாந்த், கடந்த 3 மாதங்களுக்கு முன்பாக, முதல் மனைவியை விவகாரத்து செய்துவிட்டு, இரண்டாவது திருமணம் செய்துகொண்டார். மன அழுத்தம் காரணமாக, அவர் தற்கொலை செய்திருக்கலாம் என, போலீசார் தெரிவித்தனர்.

அடுத்த செய்தி

டிரெண்டிங்