ஆப்நகரம்

"என்னது நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசன் கடத்தலா?" ஜூலியின் புகாரால் பரபரப்பு

நடிகர் பவர் ஸ்டார் சீனிவாசனை காணவில்லை என அவரது மனைவி ஜூலி, போலீசில் புகார் அளித்ததால் அவர் கடத்தப்பட்டிருக்கலாம் என தகவல் வெளியானது. பின்னர் போலீசார் நடத்திய விசாரணையில் அவர் ஊட்டியில் இருப்பது தெரியவந்தது.

Samayam Tamil 7 Dec 2018, 11:50 am
காமெடி நடிகர் பவர்ஸ்டார் சீனிவாசனை நீங்கள் யாரும் மறந்திருக்க முடியாது. கடந்த சில ஆண்டுகளுக்கு முன் சில பேட்டிகள் மூலம் பிரபலமானவர்.
Samayam Tamil srinivasan


அதன் காரணமாவே இவருக்கு சில சினிமா வாய்ப்புகள் வந்தது. முன்னதாகவே இவர் தனது சொந்த தயாரிப்பில் திரைப்படங்களை எடுத்து அதில் தானே நடித்தும் இருக்கிறார். இவர் பிரபலமானதற்கு பின்பு வந்த சில படவாய்ப்புகளை இவர் சரியாக பயன்படுத்த தவறியதால் தற்போது பெரிய வாய்ப்புகள் எதுவும் இல்லை.

இதற்கிடையில் அவரது சொந்த வாழ்வில் அவ்வப்போது சில சிக்கல்களில் சிக்கி செய்திகளில் இவரது பெயர் அடிபடும். இந்நிலையில் தற்போது பவர் ஸ்டார் சீனிவாசனின் மனைவி ஜூலி சென்னை அண்ணாநகர் போலீஸ் ஸ்டேஷனில் அவரை காணவில்லை என்று புகார் அளித்தார்.

மேலும் அவரை சிலர் பணம் கேட்டு மரட்டி வந்ததாகவும் அவர் மனைவி தனது புகாரில் குறிப்பிட்டிருந்தார். இதையடுத்து போலீசார் அவரை பணம் கேட்டு மிரட்டியவர்கள் கடத்தியிருக்கலாம் என்ற ரீதியில் விசாரணை துவங்கினர்.

இதையடுத்து போலீசார் பவர் ஸ்டார் சீனிவாசனை தொடர்பு கொண்டனர். அப்பொழுது அவர் சொத்து விவகாரம் காரணமாக தற்போது ஊட்டியில் உள்ளதாகவும் அதை முடித்து விட்டு சென்னை திரும்புவதாகவும் உறுதியளித்தார். இதற்கிடையில் பவர் ஸ்டார் கடத்தப்பட்டார் என தகவல்கள் பரவி பரபரப்பானது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்