ஆப்நகரம்

கொரோனா உதவி தொகை அறிவித்த பிரபாஸ்: எத்தனை கோடி கொடுத்துள்ளார் பாருங்க

கொரோனா வைரஸ் பிரச்சனைக்காக மக்கள் ஊரடங்கில் இருக்கும் வேளையில், அரசுக்கு பல நடிகர்கள் உதவி அளித்து வருகின்றனர். பாகுபலி பிரபாஸ் எத்தனை கோடி கொடுத்துள்ளார் பாருங்க.

Samayam Tamil 26 Mar 2020, 11:55 pm
கொரோனா வைரஸுக்கு எதிரான போராட்டத்தில் அரசுக்கு உதவ தெலுங்கு சினிமா நட்சத்திரங்கள் பலரும் அரசுக்கு உதவ முன்வந்திருக்கின்றனர்.
Samayam Tamil Prabhas


நடிகர் மகேஷ் பாபு ஒரு கோடி ருபாய், பவர் ஸ்டார் பவன் கல்யாண் இரண்டு கோடி ரூபாய் என மேலும் மற்ற சினிமா நட்சத்திரங்களும் ஆந்திரா மற்றும் தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு பணம் அளித்துள்ளனர்.

இந்நிலையில் பாகுபலி நடிகர் பிரபாஸ் 4 கோடி ரூபாயை தருவதாக அறிவித்துள்ளார். பிரதமரின் நிவாரண நிதிக்கு 3 கோடி ரூபாயும், ஆந்திர முதல்வர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும், தெலுங்கானா முதலமைச்சர் நிவாரண நிதிக்கு 50 லட்சம் ரூபாயும் வழங்குகிறார் பிரபாஸ்.

மொத்தம் 4 கோடி ரூபாய் பிரபாஸ் கொடுத்துள்ளார்.

பிரபாஸ் தற்போது நடித்துவரும் படத்தின் ஷூட்டிங் ஜார்ஜியா நாட்டில் நடந்து வந்த நிலையில் அங்கிருந்து சில நாட்கள் முன்பு வந்த மொத்த படக்குழுவும் தங்களை தனிமைப்படுத்திக்கொண்டனர்.

பிரபாஸும் தற்போது வீட்டில் தன்னை இரண்டு வாரங்களுக்கு தனிமை படுத்தி கொண்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்