ஆப்நகரம்

அஜித்தை பின்னுக்கு தள்ளிய பிரபாஸ் !!

ரிலீசுக்கு முன்பே கோடிகளை வாரிக்குவித்து அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை பின்னுக்கு தள்ளியிருக்கிறது பாகுபலி பரபாஸ் நடித்திருக்கும் “சஹோ” திரைப்படம்.

Samayam Tamil 15 Aug 2019, 7:14 pm
“ஈஸ்வர்” படத்தின் மூலம் தெலுங்கு சினிமாவில் காலடி எடுத்து வைத்தவர் பிரபாஸ். இவர் தெலுங்கு சினிமாவில் முன்னணி கதாநாயகனாக வளம் வருகிறார். இவர் நடித்த “பாகுபலி” திரைப்படம் உலக சினிமா ரசிகர்களால் பெரிதும் பாராட்டப் பட்டது. இதைத்தொடர்ந்து எடுக்கப் பட்ட பாகுபலி இரண்டாம் பாகம் இந்திய சினிமாவில் வசூல் சாதனை படைத்தது. இரண்டு படத்திலும் பிரபாஸ் கதாநாயகனாக மிரட்டியிருப்பார்.
Samayam Tamil 1

சாஹோ

Also Read : எனக்கு அது தெரியாது: என் வீட்டில் தான் அவர் மூச்சு பிரிய வேண்டும்:ரஜினிகாந்த்!
தற்போது இவர் “சாஹோ” என்ற படத்தில் நடித்துள்ளார். இம்மாத இறுதியில் வெளியாகும் இந்தப் படத்தை சுஜீத் இயக்கியுள்ளார். அவருடன் ஸ்ரத்தா கபூர், அருண்விஜய், நீல்நிதின் முகேஷ், ஜாக்கி ஷராப் மற்றும் பலர் நடித்துள்ளனர். மிகப் பிரம்மாண்டமான ஆக்ஷன் படமாக உருவாகி வரும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, மலையாளம் ஆகிய மொழிகளில் வெளியாக உள்ளது. “சாஹோ” படத்திற்காக 100 கோடி ரூபாய் சம்பளம் பிரபாஸ் வாங்கியுள்ளதாக கூறப்படுகிறது .

சாஹோ


பிரபாஸ் நடித்துள்ள ஆக்ஷன் திரில்லர் படம் சாஹோ உலகம் முழுவதும் ஆகஸ்ட் 30ம் தேதி ரிலீஸ் ஆகிறது. ஆகஸ்ட் 15 என இருந்த ரிலீஸ் தேதியை போஸ்ட் ப்ரோடக்ஷன் பணிகள் முடியாததால் தள்ளிவைத்தனர்.
“சாஹோ” படத்தின் மொத்த பட்ஜெட் 350 கோடி என்று சமீபத்திய பேட்டி ஒன்றில் பிரபாஸ் தெரிவித்திருந்தார். இந்நிலையில் தற்போது இந்த படத்தின் ரிலீசுக்கு முன்பே தயாரிப்பாளருக்கு பெரிய அளவுக்கு லாபம் வந்துள்ளது என்று தெரிவித்துள்ளனர். ரிலீஸ் உரிமைகள் விற்பதன் மூலம் மட்டுமே 320 கோடி ருபாய் தயாரிப்பாளருக்கு கிடைத்துள்ளது. இதுமட்டுமல்லாமல் சாட்டிலைட், ஆன்லைன் ஸ்ட்ரீமிங் உரிமைகள் விற்கப்படமால் இருக்கின்றன. இதனால் தயாரிப்பாளருக்கு மிகப்பெரிய அளவில் லாபம் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Also Read : நான் வந்துக்கிட்டே இருக்கேன்டா வடிவேலுவின் புதிய படம்!
பாகுபலி படத்திற்கு பிறகு 2 ஆண்டுகள் கழித்து வெளியாகும் பிரபாஸின் படம் எனபதால் படத்திற்கு மிகப்பெரும் எதிர்பார்ப்பு நிலவுகிறது. தெலுங்கில் மட்டுமல்லாது தமிழ், மலையாளம் மொழிகளிலும் மிகப்பெரிய அளவில் இப்படம் விற்பனை செய்ய்ப்பட்டுள்ளது. தமிழில் சமீபத்தில் வெளியான அஜித்தின் நேர் கொண்ட பார்வை படத்தை விட அதிக விலைக்கு இப்படம் விற்பனை செய்யப்பட்டதாக தகவல்கள் கூறுகிறது.

அடுத்த செய்தி

டிரெண்டிங்